எண்ணெய்த் தாங்கிக் கப்பலான எம்டி ஒர்கிம் ஹார்மனி-இன் 22 பணியாளர்களும் இன்று அதிகாலை மணி 2.30க்கு விடுவிக்கப்பட்டனர்.
மலேசிய கடற்படை கடத்தல்காரர்களுடன் பேச்சு நடத்தியதை அடுத்து பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக மலேசிய கடலோர அமலாக்க நிறுவனத் துணைத் தலைவர் அஹ்மட் பூசி கூறினார்.
இதனிடையே, கடத்தல்காரர்கள் கப்பலில் இருந்த படகு ஒன்றில் தப்பி ஓடிவிட்டதாக கடற்படைத் தலைவர் அப்துல் அசீஸ் ஜாபார் தெரிவித்தார்.
எம்டி ஒர்கிம் ஹார்மனி, கடந்த வியாழக்கிழமை 6,000 டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு மலாக்காவிலிருந்து குவாந்தானுக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டது.
-பெர்னமா

























அம்புலிமா கதையால இருக்கு கடத்தல் காரர்கள் தப்பி ஓடிவிட்டார்கள் எப்படி.ஒரு ஸ்மார்ட் கடல் படை எப்படிஇருந்திருக்க வேண்டும் கடத்தல்காரர்கல் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அந்த கப்பலை சுற்றி ரோந்து கடல் படை இருந்திருக்க வேண்டும் கடத்தல் காரர்களும் தபிதுருக முடியாது அது ஸ்மார்ட்.எது எப்படியோ 22பெரும் உயிர் சேதம் இல்லை மனம் நிம்மதி அடைகிறது.
கடற் கொள்ளையர்கள் தப்பித்துவிட்டார்களா?? பல கோடி வெள்ளி கடற்படைக்காக செலவளித்ததெல்லாம் (செலவு அழித்ததெல்லாம்) வீண் விரையமோ??? 5 மைல் கல் தொலைவிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி இப்போது தப்பித்துவிட்டார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? கையாலாகாதவர்கள் என்று சொன்னால் தவறில்லையே!! நாட்டின் பாதுகாப்பு இவ்வளவுதானா?? நாட்டின் கடற்ப படையின் திறமையும் பெருமையும் இவ்வளவுதானா??
நல்ல ஒத்துழைப்பு வழங்கிய வியாட்நாம் அன்பர்களுக்கு நன்றி.