2001-இல், டிஏபி தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறி பாஸ் கட்சியுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டது.
பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது திருமணமும் அதே காரணங்களால் முறிந்து போனது.
பாஸும் டிஏபி-யும் ஒன்று மற்றொன்றின் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியாது. ஆனாலும், அவற்றுக்கிடையே விரும்பவும் முடியாத வெறுக்கவும் முடியாத உறவு ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. அதனால், மூன்றாவது முறையாக இரண்டுக்குமிடையில் ஒரு பிணைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது.
பாஸும் டிஏபி-யும் 2008-இல் இரண்டாவது முறையாக ஒன்று சேர்ந்தபோது அப்பிணைப்பு முதலாவது பிணைப்பைவிட நீண்ட காலம் நீடித்ததைப் புதிதாக பாஸ் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துவான் இப்ராகிம் மான் சுட்டிக்காட்டினார்.
“அந்த வகையில் மூன்றாவது முறையாக உருவாகும் ஒத்துழைப்பு முந்தியதைவிட நீண்ட காலம் நிலைத்திருக்கலாம்”, என்றாரவர்.
ஆனாலும், எதிர்காலத்தில் நடக்கப்போவதை யாராலும் முன்னறிந்து கூற முடியாது என்று கூறிய துவான் இப்ராகிம், தோல்விகூட பிற்காலத்தில் ஒரு வரமாக அமையலாம் என்றார்.
“2004-இல் மிகப் பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்ற அம்னோ இப்போது குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் என்பதை யாராவது எதிர்பார்த்திருக்க முடியுமா?”, என்றவர் வினவினார்.
நேற்று, இன்னொரு பாஸ் தலைவர், முஸ்தபா அலியும், பக்கத்தான் செத்து விட்டதாக டிஏபி அறிவித்திருப்பதை நிராகரித்தார்.
கூட்டணி தற்காலிகமாக “மயங்கிக் கிடக்கிறது” என்று கட்சியின் தேர்தல் இயக்குனரான அவர் சொன்னார்.
பாஸும் டிஏபி-யும் மீண்டும் கைகோப்பதை முஸ்தபா நிராகரிக்கவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியாலும் தனித்து செயல்பட இயலாது என்றாரவர்.

























முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு எப்படி இப்படியெல்லாம் உங்களால் பேச முடிகின்றது!. “எந்தவொரு அரசியல் கட்சியாலும் தனித்து செயல்பட இயலாது” என்பது பாஸ் கட்சிக்கும் மக்கள் நீதிக் கட்சிக்கு மட்டும் தகும்.
PSM கட்சி பல்லின மக்கள் கொண்ட தொழிலார்களையும் ஏழைகளையும் மையமாகக் கொண்ட கட்சி. இப்படிப்பட்ட பல்லின மக்கள் கொண்ட மூன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளைக் கொண்டு புதிய எதிரணி அமைக்க தே.மு. அடுத்தப் பொது தேர்தலில் கவிழும். தே.மு. என்ற கூட்டணித் தத்துவத்தையும் மிதவாதத்தையும் இந்த புதிய கூட்டணி பின் பற்றுவது நலம். அதுவே மலேசியாவிற்கு நலம் தரும்.
அவங்க பல்லவியில் நான்காவது திருமணமும் செய்யலாம்!. அதான் பழக்க வழக்க தோஷம் அப்படி.
இப்படி சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?? மக்கள் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட கட்சிக்கு இப்போது நல்ல செருப்படி!! இப்போது, குத்துதே குடையுதே என்று மறைமுகமாக கெஞ்சுவது ஏனோ?? வாய் வீச்சு வீரர்களைக் கொண்ட உலாமா தலைவர்களிக் கொண்டு பீடு நடை போடலாமே?? ஒதுக்கப்பட்டால், கோமணமும் மிஞ்சாது என்பது இப்போது தெரிகிறதல்லவா?? மக்கள் துரோகிகள், மானங்கெட்ட மட்டமான அரசியல்வாதிகள் நிறைந்த கட்சி என்பதை நிரூபித்துள்ளீர்கள்!!!!!!!!
தேனீ சொன்னதுபோல் புதிய கூட்டணியே நல்ல தேர்வாகும்!!! அரசியல் சூடாக இருக்கும்போதே முடிவெடுப்பது நல்லது!!!
இரண்டாவது திருமணத்தால் யார்
பலனடைந்தார்.முன்றாவது திருமணத்துக்கு பெண் சம்மதிக்க
மாட்டாள்.வேறு கணவரை தேடிக்கொள்வார்.
ரோக்கேட்டுடன் கூட்டனி இல்லையன்றால் ,,, வரும் பொது தேர்தலில் முழு நிலவு தேய்ந்து பிரையாகிவிடும் என்பதை புரிந்துகொண்டானோ ,,,
பாஸ் தலைவரும் அவரது உலாமா தலைவர்களும் பக்காத்தானை அழிக்காமல் வெளியேறமாட்டார்கள். எதிர்க்கட்சியை உடைக்க இவர்கள் அம்னோவுடன் சேர்ந்து நகர்த்தும் பகடைக்காய் நாடகமே!!!!
பாவம் பாஸ் கட்சி!! ஹூடுத் விவகாரத்தில் அம்னோ மறுபடியும் பாஸ் உலாமா தலைவர்கள் முகத்தில் மூத்திரம் அடித்துவிட்டது!!!!