புதன்கிழமை நாடாளுமன்றத்தில் “கொலை மிரட்டல்” விடுத்த கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரடின்மீது மக்களவைத் தலைவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பங் மொக்தார் தம் வீட்டுக்கு முன்புறத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியபோது விடுத்த அம்மிரட்டல் குறித்துக் கருத்துரைத்த பல வழக்குரைஞர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரரகள் தம் குடும்பத்தாருக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறிய பங், அவர்களின் நல்ல காலம் தாம் அப்போது வீட்டில் இல்லாமல் போனது என்றார். இருந்திருந்தால் “சிலர் இறந்திருக்கக்கூடும்” என்றவர் சொன்னார்.
மீண்டும் அப்படி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் துணிச்சலுண்டா
என்றவர் சவால் விடுத்தார்.
அரசமைப்பின்படி நாடாளுமன்றத்தில் எம்பிகளுக்கு சட்டவிலக்கு உண்டுதான். ஆனாலும் பங்கின் பேச்சு “நாடாளுமன்றத்துக்கு ஏற்புடையதல்ல”, அதனால் அவரைக் கண்டிக்க வேண்டும் என வழக்குரைஞர் நியு சின் கூறினார்.
பல எதிரணி எம்பிகள் இதைவிட சிறிய குற்றங்களுக்காகக் கண்டிக்கப்பட்டுள்ளனர், இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என சுதந்திரத்துக்காக போராடும் வழக்குரைஞர்கள் இணை- நிறுவனர் எரிக் பால்சன் குறிப்பிட்டார்.
2013-இல் பாடாங் செராய் எம்பி, என். சுரேந்திரன் மக்களவைத்தலைவர் பாரபட்சம் காண்பிக்கிறார் என்று குற்றம்சாட்டியதற்காக ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது ஓர் எடுத்துக்காட்டு.
“ஆனால், இந்த விசயத்தில் மக்களவைத் தலைவர் கண்ணை மூடிக் கொண்டார்போல் தோன்றுகிறது”, என்றாரவர்.
பிகேஆர் சட்டப் பிரிவுத் தலைவர் லத்திபா கோயா, கொலை மிரட்டல் விடுக்கும் ஒருவருக்குச் சட்டவிலக்கு அளிக்கப்படுவது எப்படி என்பது தமக்குப் புரியவில்லை என்றார்.
அப்போது அங்கிருந்த பண்டிகார் அமின் மூலியா பாரபட்சமாகத்தான் நடந்து கொண்டார் என்பது தெளிவு என்றாவர்.
“இதை எல்லாம் அனுமதிக்கும் அவர் நாடாளூமன்றச் சீரமைப்புப் பற்றிப் பேசுவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை”, என லத்திபா கூறினார்.

























எல்லாம் ஒரே கட்டையில் ஊறிய மட்டைகள்
லகி..புன், சாபா சமா சாபா மா!!! அதைத்தான் என் தாய் தமிழ் அழகாகச் சொல்லிவிட்டாரே!!!
மக்களவை தலைவர் என்பவர் நன்கு படித்த,அறிவு முதிர்சிக்கொண்ட,
இனம் என்று பார்க்காத,சிறந்த பேச்சர்ளராக இருக்க வேண்டும் . இந்த தலைவரோ பேசும்போது பல்லை கடித்துக்கொண்டு, என்ன கூறுகிறார் என்று யாருக்கும் புரியாத மக்களவை தலைவராக ஆளும் கட்சியால் முடி சூடப்படவராகும் . அதன் காரணமாகவே பல சமயங்களில் ஆளும் கட்சியினர் எந்த விதமான,முறைகேடான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் சிலை போன்று அமர்ந்து இருப்பதை காண முடிகின்றது. இவரை அகற்றும் வரையில் ஆளும் கட்சினரின் அடாவடித்தனமும் ,சகித்துக்கொள்ளதா பேச்சும் தொடர்ந்து நடைபெறும், இதனை போன்றே காவல்துறையின் தலைவரும். கூடிய விரைவின் தண்டனை பெறுவார் இறைவனின் சார்பாக. நன்றி .
இப்பொழுது நாடாளுமன்றத்தில் புதியதொரு கக்கூஸ் கட்டப் பட்டு நாடாளுமன்றம் சீர்திருத்தப் பட்டு விட்டதே!.
சபாநாயகர் (சௌடாலா) / ஒய்யார ஓய்வெடுக்க புதிய அறையோ???
பங்மொக்தார் தலை மயிரை பார்த்தால் பன்னி முடி.இவன் Isis அங்கத்தினராக இருப்பாரோ அதனால் சபை நாயகரை அச்சம் கவ்விக்கொண்டது போலும்.
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
தற்போதைய நாடாளுமன்றம் ஒரு ‘பாசார் மாலாம்’ என அடிக்கடி கூறிவருகிறேன். யார் கேட்கிறார்கள்.
மக்களைவத் தலைவர் பாங் மொக்தார் பேசினால் “சிலக்கான்” “சிலக்கான்” என்று தொடர்ந்து பேச அனும்திப்பார் மற்ற எம்.பிக்கள் பேசினால் “டுடோக்” டுடோக் என்று அமரும் படி கூறுவார்.பாங் மொக்தார் மீது அவருக்கு அளவில்லாத பாசம்.
பண்டிகாரன் பதவி விலக ராஜினாமா கடிதம் கொடுத்ததை ஏற்க மறுத்த அஜைப் ,,,, இவன் இருக்கையில் இருந்ததால் தான் உம்னோ காரன்கள் நாடாளும்மன்றத்தில் அடாவடித்தனமாக பேச முடியும் ,,,, அவர்கள் நினைத்ததை சட்டமாக நிறைவேற்ற முடியும் ,,,, எதிர்கட்சியினரை பேசாமல் ஒடுக்க முடியும் என்பதனால்,,,, பண்டியை நிலைநிறுத்திக் கொண்டான் போலும் ,,,,இவன் ஒரு உம்னோ ஜால்ரா ,,,,,
படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் எட்டை கெடுத்தான் புது
மொழி இணைப்பு மூலியா சபை
நாயகர் நாடாளுமன்ற மாண்பை
கெடுத்தார்.
நாடாளுமன்றத்தில் போரடிக்கும் போதெல்லாம் “TIME PASS” பண்ண “செக்ஸி”-யாக பேசி அவையை கலலப்பாக நடைபெற பாடுபடும் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தாருக்குத்தான் எவ்வளவு எதிர்ப்புகள்/இடைஞ்சல்கள் என்று வருத்தத்துடன் இருப்பது BN MP-க்கள் மட்டுமல்ல தானும்தான் என்பதை நிருபித்து விட்டார் மக்களவை தலைவர் பண்டிகார்.
மக்கள் அவை எப்படி நடைபெறவேண்டும் என்பதை பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தெரியும் புரியும். ஆனால் ஈன ஜென்மங்களுக்கு எப்படி புரியும்? அதிலும் மக்களின் பணத்தில் உடல் வளர்க்கும் கொள்கை இல்லா பணக்கார அஞ்சடிகளுக்கு என்றுமே புரியாது– அத்துடன் இன மத வெறியை தூண்டியே காலம் தள்ளமுடியும் இந்த இழி ஜென்மங்களுக்கு. இந்த 21 வது நூற்றாண்டிலும் இத்தகைய பிற்போக்கான செயல்களால் எப்படி இந் முன்னேற முடியும்? அதிலும் உண்மையிலேயே மலாய்க்காரன் களுக்கு ஒற்றுமையில் அக்கறை கிடையாது– எப்படியாகிலும் அதிகாரமும் பதவியும் அவன்கள் கையிலேயே இருக்க எல்லாவித ஈன செயல்களையும் செய்வான்கள்