துணைப் பிரதமர் பதவியிலிருந்து தூக்கப்பட்டபோது அன்வார் இப்ராகிம் தம் மனக்குறைகளை வெளிநாட்டு ஊடகங்களிடம் வெளியிட்டார் என்பதற்காக அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்மீது மிகவும் ஆத்திரமடைந்ததாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அனுவார் மூசா கூறினார்.
ஆனால், அதே மகாதிர் இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது கொண்ட அதிருப்தியை வெளிப்படுத்த அதே வெளிநாட்டு ஊடகங்களைத்தான் நாடுகிறார் என்றாரவர்.
நியு யோர்க் டைம்சில் மகாதிர் தெரிவித்த கருத்துகளால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்த அனுவார் மூசா, “அப்போது அவருக்கு அது பிடிக்காதிருந்தது”, என்றார்.
அன்று அவர் உபதேசித்ததை இன்று கடைப்பிடிக்காதது ஏன் என்பது தமக்குப் புரியவில்லை என்றாரவர்.
ஜூன் 17-இல் நியு யோர்க் டைம்ஸ் நாளேட்டுக்கு நேர்காணல் வழங்கிய டாக்டர் மகாதிர், “அம்னோ, அரசியல்-அரவணைப்பை நாடுவோரின் சங்கமமாக மாறிவிட்டது” என்று வருணித்தார்.
தகுதியற்ற தலைவர்கள், “அவர்களைக் காட்டிலும் அறிவாளிகளைக் கட்சிக்குள் விடாமல் தடுக்கிறார்கள்” என்றும் அவர் சொன்னார்.


























மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
எது எப்படியோ!!! பகல் கொள்ளையர்கள் தொலைந்தாலே போதும்!! நாடு உருப்படும்!!! அதுவே மக்களுக்கு வேண்டும்!!!
மகாதிமிரின் அரசு செயல்பட்டபோது, இந்த அன்னுவார் மூஸா, மகாதிமிருக்கு பயங்கரமாக கூஜா தொக்கியவர். இன்று யோக்கியம் பேசுகிறார். மகாதிமிர் ஒரு கொடிய நஞ்சுகொண்ட நாகப்பாம்பு. இந்த அம்னோ பன்னாடைகள் அனைத்தும் நாகப்பாம்பு குட்டிகள்.
இன்னும் நிறைய இந்த காக்கா மகாதிர் பதில் சொல்ல இருக்கிறது.