சிருலை மலேசியாவுக்குக் கொண்டுவர இன்னும் மனுச் செய்யவில்லை

sirolபோலீஸ்  அதிரடிப் படையின்  முன்னாள்  உறுப்பினர்களான  சிருல்  அஸ்ஹார்  உமருக்கும்  அஸிலா ஹட்ரிக்கும்  தூக்குத்  தண்டனை விதித்து  ஆறு  மாதங்கள்  ஆகின்றன.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்குத்  தப்பியோடிய  சிருலை  அங்கிருந்து  அழைத்துவர  மலேசிய  அரசாங்கம்  இதுவரை  விண்ணப்பம்  எதுவும்  செய்து  கொள்ளவில்லையாம். கொல்லப்பட்ட  அல்டான்துன்யா  ஷரிபூ-வின்  தந்தையாரின்  வழக்குரைஞர்  ராம்  கர்பால்  இதனைத்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும்  இரண்டு  தடவை  கேட்டு  விட்டதாக அந்த  புக்கிட்  குளுகோர்  எம்பி  கூறினார். ஆனால், அதற்கு  அளிக்கப்பட்ட  பதில்  நம்பிக்கை  தருவதாக  இல்லை  என்றார்.

“சிருலை நாடுகடந்து  அழைத்துவர  அனுமதி  கேட்டு மலேசிய  அரசாங்கம்  இன்னும்  மனுச்  செய்யவில்லை  என  நினைக்கிறேன்”, என்றாரவர்.