பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி நிதிகளை 13வது பொதுத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொண்டதாக வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டிருக்கிறது.
2012-இல் கெந்திங் குழுமத்திடமிருந்து மின் உற்பத்தி நிலையம் ஒன்று அதிக விலைக்கு வாங்கப்பட்டதாம்.
அதன்பின்னர் கெந்திங், நஜிப்பின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு அற நிறுவனத்துக்கு நன்கொடை வழங்கியது. அப்பணம் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
“2012-இல், 1எம்டிபி கோலாலும்பூருக்கு அருகில் கெந்திங் 75விழுக்காடு பங்குரிமை கொண்டிருந்த நிலக்கரி மின் ஆலை ஒன்றை வாங்கியது.
“அதற்குக் கொடுக்கப்பட்ட விலை கிட்டதட்ட யுஎஸ்$740 மில்லியன். இது ரிம2.3 பில்லியனுக்குச் சமம்.
“இந்தக் கொள்முதல் நடந்து முடிந்த சில மாதங்களில் கெந்திங் பிளாண்டேசன்ஸ் பெர்ஹாட் சுமார் யுஎஸ்10மில்லியனை நஜிப்புடன் தொடர்புள்ள அற நிறுவனமொன்றுக்கு நன்கொடையாக வழங்கியது என கெந்திங் பிளாண்டேசன்ஸ் பேச்சாளர் கூறினார்”, என அச்செய்தி கூறிற்று.
அந்த அறநிறுவனத்தின் பெயர் யயாசான் ரக்யாட் 1மலேசியா என WSJ கூறியது.
1எம்டிபி அந்த மின் ஆலையில் கெந்திங் நிறுவனத்தின் பங்குரிமையை வாங்குவதற்கு ஐந்து மடங்கு அதிக விலை கொடுத்ததாக WSJ கூறியது.
“அந்த விற்பனையின்வழி ரிம1.9 பில்லியன் ஆதாயம் கிடைத்ததாக கெந்திங் பின்னர் அறிவித்தது. இதிலிருந்து அதன் உண்மையான பெறுமதி ரிம400 மில்லியன்தான் அதாவது 1எம்டிபி கொடுத்த விலையில் ஐந்தில் ஒரு பங்குதான் என்பது புலப்படுகிறது”, என்று அது கூறிற்று.

























rosmah shopping panna payanpaduthi kondaal
முதலில்
ஒரு நல்ல மனிதர் அதுவும் யாரும் செய்யதைதை
இவர் செய்து விட்டார்
பிரதமர் ரொம்ப
நல்ல மனிதர்
தமிழ் மக்களுக்கு ரொம்ப
செய்தார்
வாரி கொடுத்தா. இதார்கு
முன்னால்
உள்ள
பிரதமர்கள்
நமக்கு என்ன
செய்தார்கள். நாம்
யோசிக்க
வேண்டும். ஒரு வள்ளல் ஒரு மாகன் நம்
பிரதமர்
இப்போது உள்ள பிரதமர் நம்ம பிரதமர். செய்த தவறை அவர் மறைக்க மட்டார். நல்ல மனிதர் நாம் மனிப்போம்.
ஆகா என்னே கருத்து நம்ப gmohan அவர்களுக்கு ! உண்மைதான் நீங்கள் சொல்வது , ஆனால் மானியமாக அவர் கொடுத்ததெல்லாம் தனி நபர் அரவாரியத்துக்கு . அதை அவனுங்க மிளகாய் நட்டு நம் தலையில் அரைத்து விட்டார்கள் .
“1MDB” பணத்தை நஜிப் தேர்தலுக்கு பயன்படுத்தி கொண்டாரா ? அல்லது “BR1M” எனப்படும் “BUDAYA RASUAH 1 MALAYSIA” கொள்கை வெற்றியடைய மக்களுக்கு லஞ்சம் கொடுக்க பயன்படுத்தி கொண்டாரா ?