ஜொகூர் மாநிலம் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கோருபவர்களுக்கு தேச நிந்தனைச் சட்டம் 1948 லிருந்து விலக்கு ஏதும் அளிக்கப்படவில்லை என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறினார்.
சாபாவும் சரவாக்கும் பிரிந்து செல்ல வேண்டும் என்று கூறியவர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை இதனைக் காட்டுகிறது என்று அசிஸ் சுட்டிக் காட்டினார்.
இளவரசர் தேச நிந்தனைச் சட்டம் 1948 மற்றும் அது போன்ற இதர சட்டங்களை மீறினாரா என்பது குறித்து சட்டத்துறை தலைவரும் போலீசாரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
அனைத்து குடிமக்கள் மீதும் சட்டத்தை சமமாக அமல்படுத்தும் கடமை இந்த இலாகாகளுக்கு உண்டு; ஜொகூர் இளவரசருக்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு இல்லை என்றாரவர்.
ஆட்சியாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு, ஒன்பது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே அந்த சலுகை உண்டு என்று அசிஸ் பாரி மலேசியாகினியிடம் கூறினார்.

























வெறுமனே வெட்டிப் பேச்சு வேண்டாம். என்னதான் உசுப்பி விட்டாலும் நடக்கப் போவது ஒன்றுமில்லை.!!! அடுத்து ஜோஹோரும் எதிர்கட்சியின் பால் வீழ்ந்தால்… அம்போதான் பி என் ஆட்சி!!!! அம்னோ தலைவர்கள் என்ன கேனையர்களா???
பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது என்பதனை ஆராயுங்கள் . நிதானமாக செயல்பட்டால் இந்த எண்ணம் வர வாய்ப்பில்லையே. நாட்டின் நலன் மக்கள் நலன் கருதி செயல்பட்டால் அனைவருக்கும் நன்மையே.
காவல்துறை தலைவருக்கு இதையெல்லாம் கேட்க தைரியம் இல்லை. இதுவே சாதாரண குடிமகனாக இருந்திருந்தால் இந்நேரத்திற்கு கைது செய்து சந்தி சிரித்திருக்கும். ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆணவம் கொண்டார் போலிருக்கு!.
பனிப் போர் ஆரம்பம்
அட ..வெட்டி பேச்சு…மலைய்காரன் விழித்து கொண்டான் அப்பு…
கொஞ்ச நாள் தனா அடங்கிடும்…
“அடுத்து ஜோஹோரும் எதிர்கட்சியின் பால் வீழ்ந்தால்… அம்போதான் பி என் ஆட்சி!!!! அம்னோ தலைவர்கள் என்ன கேனையர்களா???” இதை நான் லைக் பண்றேன்..
JOHOR பிரிந்து செல்வய்ஹு சால சிறந்தது ,பல இன மக்களும் சிறப்பாக வாழ்வார்கள்
சட்ட நிபுணர் சொல்லுவது உண்மை தான்! ஆனால் இளவரசர் மேல் கைவைத்தால் நடப்பது வேறு! சும்மா மிரட்ட வேண்டாம்!
ஆமாம் உண்மை சட்டத்தை மக்களை தண்டிப்பதற்கு மட்டுமே உபயோகிக்கிறார்கள்,பாதுகாக்க இல்லவே இல்லை.பாரபட்சமின்றி செயலில் வைத்தால் தானே,வழக்கு,நீதிமன்றம்,நீதிபதி,போலிஸ்,அரசு,ஆட்சியாளர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.தெள்ளதெளிவாக சட்டங்கள் எழுதப்பட்டிருந்தாலும் ஆட்சியாளரை அவமதிப்பு குற்றத்தில் டத்தோ ஸ்ரீ நஸ்ரி மீதும்,இனங்களுக்கு இடையே சசலப்பை ஏற்படுத்திய போலிஸ் படை தலைவரின் சகோதரர் மீது என்ன நடவடிக்கை எடுத்தனர்.நாட்டில் உள்ள சட்டடத்தை முறையாக அமலில் வைக்க முடியாத இவர்களுக்கு இளவரசரை தண்டிக்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.சாதாரண குடிமகன் செய்திருந்தால் பார்க்க வேண்டும் பிசுறு இல்லாமல்,கண்டிப்புடன் சட்டம் நிறைவேற்றி தண்டிப்பார்கள்.வெட்கங்கெட்டவர்கள்.
ahahah ko….. iruntha pudinggadaa parppom