1எம்டிபி பணம் 13வது பொதுத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திகொள்ளப்பட்டதாகக் கூறும் வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்தி குறித்து பிரதமர் மெளனமாக இருக்க முடியாது என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்.
“அச்செய்திக்குப் பிரதமரும் பிரதமர் அலுவலகமும் பதிலளிக்காமல் இருப்பது பிரதமரின் நம்பகத்தன்மைக்கு மட்டுமல்ல அனைத்துலக அளவில் நாட்டின் பெயரையும் கெடுத்து விடும்”, என்று கிட் சியாங் அறிக்கை விடுத்துள்ளார்.
“1எம்டிபி-இன் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் என்ற முறையிலும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டிபி-இன் உச்ச அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் என்ற முறையிலும் நஜிப் மெளனம் காப்பது உசிதமாகாது. அது WSJ செய்தியை ஒப்புக்கொள்வதற்கு நிகராகும்”.
எனவே, நஜிப் தாமாகவே முன்வந்து பொதுக் கணக்குக் குழுவிடம் விளக்கமளிக்க வேண்டும் என லிம் கேட்டுக்கொண்டார். அதுவும் 1எம்டிபி அதிகாரிகள் அக்குழுவின் விசாரணைக்குச் செல்வதற்குமுன் இதைச் செய்ய வேண்டும்.

























எந்த காலத்தில் இவன்கள் எதற்கு பதில் அளித்திருக்கின்றனர்? கையாடல் கையூட்டுதல் எப்போதும் ஒரு தொடர் கதைதான்–
ஐயோ!! ஐயோ!! என்னய்யா நீங்கள்!!! அடி மேல் அடியும் இடி மேல் இடியும் விழுந்து ஏவுகணைகளும் தொடர்ந்தாள், பிரதமர் எப்படி விளக்கம் அளிப்பார்?. எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சிந்திக்கவே அவருக்கு நேரம் போதாது!!!! இதில் விளக்கமா???? என்ன நம்பிக்கை நாயகனே..எம் ஐ கரெய்க்ட்???
ஏதோ வேலை இல்லாதவன் வெளி நாட்டுப் பத்திரிகையில் போடுகிறான் என்றால் இங்குள்ளவனுக்குப் புத்தி எங்கே போயிற்று! உத்துசான் பத்திரிக்கையிலா போட்டான் இதற்கேல்லாம் பதில் சொல்லுவதற்கு? உத்துசான் சொன்னால் தான் அது உண்மை.மற்றதெல்லாம் பொய்மை!
டேய் முட்டல்
அப்ரகாம் முதலில் ஒரு உண்மை வெளிவராடும்
58 வருடம் செய்த தவறுகள் இன்று மலேசியாவில் விஸ்வருபம் எடுத்துள்ளது. 800 பில்லியன் கடனுக்கு இதுவே காரணம்.
arivan இதெல்லாம் தவறுகள் அல்ல –எல்லாம் திருடல்கள் — மக்களின் பணத்தை கையாடி சிலரே அனுபவித்து கொண்டிருக்கின்றனர்–அதிகாரம் தங்களின் கையில் இருப்பதினால் — இதெல்லாம் மூன்றாம் உலக புத்தி– மூன்றாம் உலக நடைமுறை– இதெல்லாம் வளர்ந்த நாடுகளில் பார்க்க முடியாது– அப்படி நடந்தால் அதை செய்தவர்கள் உள்ளே கம்பி எண்ணி கொண்டிருப்பார். இங்கு போல் இன்னும் அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு சாதாரண உண்மை விளம்பிகளை மட்டம் தட்டிகொண்டிருக்க முடியாது.