பாஸ் தலைமையின் போக்கில் 100 நாள்களில் மாற்றம் காணப்படாவிட்டால் கட்சியில் உள்ள முற்போக்குவாதிகள் பக்கத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவாக செயல்படும் புதிய கட்சி ஒன்றை அமைக்கக்கூடும் என்று ஷா ஆலம் எம்பி காலிட் சமட் இன்று எச்சரித்தார்.
பாஸ் சிலாங்கூரின் முன்னாள் துணை ஆணையரான காலிட், பாஸ் தலைமைக்கு 100-நாள் கெடு வைத்தவர் பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா என்றும் அவர் சொன்னதையே தாமும் வழி மொழிவதாகவும் கூறினார்.
“புதிய பாஸ் தலைமைத்துவத்துக்கு காலஞ்சென்ற (பாஸ் தலைவர்கள்) பாட்சில் நூர், நிக் அசீஸ் நிக் மாட் போன்றோரின் பாணிக்குத் திரும்ப அவகாசம் கொடுப்போம்.
“ஆனால், தலைவரின் அறிக்கைகளைப் பார்க்கையில் அதற்கான அறிகுறிகள் இல்லை”, என்றாரவர்.
100-நாள் போதுமா என்று வினவியதற்கு அந்தக் கால அவகாசத்தை வழங்கியவர் நிக் அமார் என்றும் தாம் அல்லவென்றும் காலிட் கூறினார்.
ரமலான் முடிவடையும் போது 40 நாள்கள் கடந்திருக்கும் அதற்குள் ஏதாவது முன்னேற்றம் தென்படாவிட்டால் புதுக் கட்சி அமைக்க முன்கூட்டியே முடிவு செய்யப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

























ஷபாஸ்
KAMI SOKONG
பாகத்தான் ராக்யாட் வர வேண்டும் மாற்றம் வேண்டும்…
மட் சபுக்கு பிறகு தெளிவான நபர் கலிட் சமட் !
தெளிவான முற்போக்கு அரசியல் தலைவர்கள்…!
மேலே கருத்துக் கூறுபவர்களை கண்டு பாரிதாபப் படுகிறேன். பாக்கத்தான் செத்துவிட்டது எனக் கூறி சமாதி எழுப்பிவிட்டனர் அப்பனும் (லிம் கிட் சியாங்] மவனும்.
பக்காத்தான் செத்துவிட்டதுதான். யார் இல்லையென்று சொன்னது. ஆனால், பக்காத்தான் உருவானதுக்கான நோக்கம் சாகவில்லை என்றுதான் டி எ பி/ பி கே ஆர் சொல்கிறது. முற்போக்கு பாஸ் தலைவர்களும் அதத்தான் சொல்கின்றனர். அரசியல் தெளிவு பிறக்க முருகா கண் திறப்பாயாக!!!