கெடா, சுங்கைப் பட்டாணி தொடக்கநிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியர், முஸ்லிம்-அல்லாத மாணவர்களிடம் தண்ணீர் அருந்துவதாக இருந்தால் வகுப்பில் அருந்தக் கூடாது என்றும், கழிப்பறைக்குச் சென்று அருந்தலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தண்ணீர் இல்லாவிட்டால் அவர்கள் “குழாய் நீரையோ சொந்த சிறுநீரையோ” அருந்தலாம் என்றும் சொன்னாராம். இவ்வளவுக்கும் அவர் மாணவர் நலன்களைக் கவனித்துக் கொள்ளும் ஆசிரியராம்.
பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு புகார் கடிதம் இதனைத் தெரிவிக்கிறது.
அவரது நயமற்ற, நாகரிகமற்ற பேச்சு முஸ்லில்-அல்லாத மாணவர்களிடையேயும் சமூகத்தினரிடையேயும் ஆத்திரத்தை உண்டுபண்ணலாம் என்றது கூறியது.
“ஆசிரியரான அவரிடம் முஸ்லிம்- அல்லாத மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் மதிப்பளிக்கும் பண்பு இல்லை”, என்று அக்கடிதம் சாடியது.
நேற்று பள்ளி அணிவகுப்பின்போது இச்சம்பவம் நடந்துள்ளது.
இதன் தொடர்பில் மலேசியாகினி அப்பள்ளியைத் தொடர்பு கொண்டதற்கு அக்குற்றச்சாட்டு பற்றி அதிகாரிகளின் கூட்டமொன்று விவாதித்து வருவதாக அதனிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் அதன்மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“கெடா கல்வித் துறையிடம் விசாரிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை முடிவுக்காகக் காத்திருக்கிறோம்”, என்றார்.

























அமைச்சர் கமலநாதன் அந்த ஆசிரியரை மன்னித்துவிடுவார் கவலைவேண்டாம். மாணவர்களை அந்த ஆசிரியர் சொல்படி நடக்கசொலுவார் .
சிறு நீரில் உப்பு கலந்து இருக்கிறது,ஒரு வேளை குடித்தால் ரோசம்
வரலாம் என்று ஆசிரியர் கருதியிருக்கலாம். gst பற்றி மக்கள் மறக்க
இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வரும்.
இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில்தான் படிக்க வேண்டும், தேசியப் பள்ளிகளில் அல்ல என்பதைத்தான் அந்த மாங்கா மடையன் கூற வருகிறான்! புரிந்தால் சரி!!!!
இந்த அவமான சொல்லுக்காக வருத்தப்பட யாரும் கல்வி துறையில் இருந்து வரபோவதில்லை, அதனை கூறியவரும் வருந்தபோவதில்லை.
கல்வி துறை துணை அமைச்சர் வருவர், அந்த ஆசிரியர் கூறியது தவராக புரிந்துக்கொள்ளப்பட்ட்டு எனக் கூறி முற்றுப்புள்ளி வைப்பார்.
இதற்கு ஒரே பதில், நம் பிள்ளைகளை நம் தமிழ் பள்ளிக்கு அனுப்புவதே சிறந்தது. நமக்குள் பிரிந்து இருக்காமல் ஒன்றிணைந்து
செயல்படுத்தி நம் தமிழ் மொழியினை வளர்ப்போம். நன்றி.
தமிழ் பள்ளிகூடம் இல்லாத பச்சத்தில் சீன பள்ளிகூடத்துக்கு அனுப்புங்க , தேசிய பள்ளிக்கூடம் வேண்டாம்
இது இப்படித்தான் காலம் பூராவும் இப்படியே , தமிழன் மானத்தை அடகு வைத்த ம இ க வுக்கு நன்றி , தன் குடும்பம் மட்டும் வாழனும் சொத்து சேக்கணும் , மற்ற தமிழன் எல்லாம் எக்கேடு கேட்டால் என்ன என்று அம்னோ வுக்கு கை கூலியாக செல்யல் பட்ட நம் சாதனை தலைவருக்கே புகழ் அனைத்தும்! முதலில் சாதனை தலைவரையோ அவர் பெற்ற பிள்ளைகளையோ குடிக்க சொல்லி இருந்தால் ரோசம் பொத்துகிட்டு வந்திருக்கும் . எவன் எப்படி போனால் என்ன நாம் தான் கோடிஸ்வரனா ஆகிட்டமோ . இப்ப பின்னால் இருந்து நம்ம கைகள நோன்டிகிக்கிட்டு இருக்கோம் . எப்படியா வது ஜெய்துடுவான்ங்க. ம இ க சொத்து அனைத்தும் நம்ம தலைமுறைக்கே என்று அந்தரத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்,,,,,,,,,,,,,,,,,,
அமைச்சர் கமலநாதன் அந்த ஆசிரியரை மன்னித்து பிறகு அவரின் இதை பிடித்து ( கையை ) முத்தம் கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும் ,,
இவன் ஆசிரியன்?. எதிர்கால தலைமுறையை நல்வழிகாட்டி வாழ வைக்கும் தெய்வம்!. இதையே ஒரு மலாய்க்காரர் அல்லாத ஆசிரியர் சொல்லி இருந்தால் இந்நேரம் தண்ணி இல்லாத காட்டிற்கு பள்ளி மாற்றப் பட்டிருப்பார் அல்லது ஒழுக்க நடவடிக்கை குழுவுக்கு முன் நிறுத்தப் பட்டிருப்பார். நம்ம கமலனாரதர் அவர்கள் சமர்பிக்கும் அறிக்கை அப்படியே கிளிப் பிள்ளை போன்று நமக்கு அறிக்கையாக தருவார். இதுவரை கல்வி அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுத்தாக தகவல் இல்லை. அதனால் இதற்கும் நடவடிக்கை இருக்காது என்று நம்புவோம்.
நோன்பு இருக்க தகுதி இல்லாதவன் அந்த ஆசிரியன்.பக்குவம் இல்லாதவன்.எத்தனையோ காலம் மலேசியாவில் இல்லாத அளவு இப்பொழுதுதான் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி தான் ஒரு முஸ்லிம் என்றும் நெறி தவறாத நன்னெறி பாதையில் செல்லும் வலுவான இனவாதி என்றும் விளம்பரம் பண்ணிக்கொள முனைகின்றனர்.
மாடு அறுத்து இனவாதத்தை பள்ளியிலேயே நாத்து நடுகின்றனர்.
மற்றவர்களை அவமானபடுத்தி,தானே சிறந்த மதத்தான் என்று தம்பட்டம் அடிப்பதுதான் ………. உணர்துகிரார்களா?
ஆசிரியர்கள் இப்படி நடந்துகொள்வதற்கு காரணமே அரசாங்கம்தான். முன்பெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது அரசு சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. கூடினபட்சம், இடமாற்றத்துடன், பதவி உயர்வும் தரும். வேலியே பயிரை மேயும் கதைதான். நம் இனத்தாரை கீழ்மை படுத்தும் இச்செயல், திட்டமிட்டு செயல்படுத்தப் படுகிறது.
ஆஹா இதை பற்றி கேள்வி பட்டதும் நம்சில ம இ கா ஓநாய்கள் அவன் காலில் விழுந்து நக்கியதும் மன்னித்து விடுவான் இவன்களின் சாதனை .
குறிப்பிட்ட ஆசிரியருக்கு உள்ள இந்த சிறுநீர் குடிக்கும் பழக்கத்தினை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறாரோ?? நானும் சும்மா ஜோக்தான் அடிக்கிறேன்!!! (நோ சீரியஸ் மேன்)!
மாணவர் நலன்களைக் கவனித்துக் கொள்ளும் ஆசிரியருக்கு…ஒரு சின்ன திருத்தம் …..சிறுநீர் குடிக்க வேண்டியவர்கள் முஸ்லிம்-அல்லாத மாணவர்களின் பெற்றோர்கள்….என்ன !#%ம*(^%$இ(*^&$#று*(*க்கு….தேசிய மொழி தொடக்கநிலைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும்….வெக்ககேடுகெட்ட இந்தியர்கள்!!!
ஒரு புனிதமான மதத்தையும் மற்றும் ஆசிரியர் தொழிலையும் தானாகவே அவமானம் செய்து கொண்டான் இந்த மடயன்
குறிப்பிட்ட ஆசிரியருக்கு உள்ள இந்த சிறுநீர் குடிக்கும் பழக்கத்தினை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறாரோ?? நானும் சும்மா ஜோக்தான் அடிக்கிறேன்!!! (நோ சீரியஸ் மேன்)! —– இது ஜோக் .
கெடா மாநில மந்திரி பெசார் மகாதீர் மகன் முக்கிருஸ் என்ன சொல்ல போகிறார்..? அதை அமோதித்து சிறுநீருடன் மலத்தையும் உன்ன சொல்வாரோ…?