பொதுக் கணக்குக் குழு(பிஏசி) அதனிடம் வாக்குமூலம் அளிக்க வரும் 1எம்டிபி நிர்வாகிகளிடம் கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிவந்த செய்தி பற்றியும் விசாரிக்கும்.
ஆனால், அதன் தொடர்பில் சாட்சியமளிக்க இப்போதைக்கு யாயாசான் ரக்யாட் 1மலேசியா அதிகாரிகள் உள்பட புதிய சாட்சிகளை அக்குழு அழைக்காது.
இப்போதைக்கு பிஏசி, 1எம்டிபி-இன் நிர்வாகம்மீது கவனம் செலுத்த விரும்புவதாக நூர் ஜஸ்லான் கூறினார். குறிப்பாக நிதி அமைச்சு, அதன் தலைமை செயல் அதிகாரிகள், கணக்காய்வாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரை அது விசாரணை செய்யும்.
அதன் பின்னர், தேவைப்பட்டால் கூடுதல் சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

























சும்மா புலி வருது, புலி வருந்துன்னு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்க வேண்டாம். இதுவரை மற்றவை எல்லாம் விசாரித்து சாதித்தது என்ன?.
1mdb ல் கணக்கு வழக்கில் தொடர்பிருந்தால், அனைத்தையும் விசாரித்து தெளிவான கணக்கறிக்கையை அறிவிப்பதே இந்த பொது கணக்கைவாளர் குழுவின் கடமை!!! தேவையானால் மட்டுமே விசாரிப்போம் என்ற என்ன அர்த்தம்??