கெடாவில் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம்- அல்லாத மாணவர்களிடம் ‘ஜோக்’அடித்ததாகச் சொல்லப்படுவதும் வகுப்பறையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்று பணித்ததும் பொருத்தமற்றவை என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்க(என்யுடிபி)த் தலைவர் ஹஷிம் அட்னான் கூறினார்.
ஆசிரியர்கள் அவை அறிந்து நகைச்சுவையாக பேச வேண்டும். முஸ்லிம்- அல்லாத மாணவர்கள் நோன்பிருக்கவில்லை என்பதால் எங்கும் எப்போதும் நீர் அருந்தும் உரிமை அவர்களுக்கு உண்டு.
“ஒவ்வோர் ஆசிரியரும் மற்ற இனத்தாரை மதிக்க வேண்டும். நாம் நகைச்சுவையாக சொல்வதை மற்றவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளக் கூடும்”,என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நோன்பு மாதம் என்பதால் முஸ்லிம்- அல்லாத மாணவர்கள் ஒளிந்துகொண்டுதான் உண்ண வேண்டும், நீர் அருந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது “அபத்தமாகும்” என்றாரவர்.
இப்படிப்பட்ட நகைச்சுவைகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றே மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி அப்துல் கரிமும் இன்று கோலாலும்பூரில் தெரிவித்தார்.
“நீங்கள் செய்தித்தாளில் படித்ததைத்தான் நானும் படித்தேன். என்னைக் கேட்டால், இது (மாணவர்களிடம் இப்படி வேடிக்கையாக பேசுவது) சரியல்ல என்பேன்”, என்றாரவர்.

























இந்த அறிக்கை யாருக்கு வேண்டும்??? ஆசிரியர் சங்கத்தின் நடவடிக்கைதான் என்ன??? நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் சும்மா அறிக்கையை மட்டும் விடுத்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?? நீரும் இப்பதவில் இருக்கின்றாய் என்பதை உணர்த்தவா???
நானாக இருந்தால்,மற்றவர்கள் பசியிலும், தாகத்திலும் இருக்கும் பட்சத்தில் நாமும் அதன் கஷ்டங்களை உணர்ந்து மற்றவர்களுக்கும் கொடுத்து நாமும் உண்ணவோ குடிக்கவோ செய்யவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்த முஸ்லீம்கள் நோன்பிருக்கிறோம்.ஆதலால் மாணவர்களே நீங்கள் இதனை கடைபிடிக்காவிட்டாலும் முஸ்லிம்கள் உணர்வை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.இதில் எந்த சிரமமும் இருக்காது. என்று புர்யும் விதத்தில் நல்ல பண்பை சக மாணவர்களுக்கு சொல்லி உணர்த்தியிருப்பேன்.
அதை விட்டு விட்டு முஸ்லிம் மாணவர்கள் மற்றவர்கள் மீது கோபம் கொள்ளும் அளவுக்கு தப்பான முறையில் வழிநடத்தும் இந்த அணுகுமுறை அதுவும் நன்னெறி ஆசிரியர் தொழில் புரியும் ஒருவர் செய்யும் கேவலமான நிகழ்வு இங்கு மட்டும்தான் நடக்கிறது.
இது வரையில் அரசாங்கம் பிரிவிவுகளிலும் , கவ்வி அமைச்சை சேர்ந்த கல்விக்கூடங்களிலும் பல விதமான இனவிவகரங்கள் ஏற்பட்டும் நமது பிரதமரும், துணை பிரதமரும் வாய்மூடி இருபதின் நோக்கம் என்ன ?
இதற்கு நாம் எவ்வாறு பதிலடி கொடுக்கவேண்டும் என்பதை யோசித்து வரும் பொது தேர்தலில் நிருபிப்போம்மாக.
இதற்கு நமது பிரதமரும் துணை பிரதமரும் என்ன சொல்ல போகிறார்கள்?என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.இவர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் மேல் பற்று இருக்கிறதா இல்லையா ?இருந்தால் இவருக்கு கொடுக்கும் தண்டனை இனி ஓரதணும் வாய் திறக்க யோசிக்கணும் யோசிக்கணும்.நடக்குமா மக்களே இது நடக்குமா?இப்பொழுது தெரிந்து விடும் நம் தலைவர்களின் லட்சணம் …
இதிலிருந்து மக்களுக்கு புரிய வேண்டும் எவ்வகையான மடையர்கள் இந்நாட்டில் பதவியிலும் மற்ற அதிகாரத்திலும் இருக்கின்றனர் என்று. நோன்பு கடை பிடிப்பவர்களுக்கு மனோ தைரியம் இருக்கவேண்டும். மற்றவர்களை குறை கூறி இழிவாக பேசுவது நோன்பு இருப்பவர்களின் சமய அறிவு கேள்விக்குறியாகிறது. பகுத்தறிவு இல்லாத ஈன ஜென்மங்கள்.
தன்னம்பிக்கை இல்லாவிட்டால் நோன்பிருப்பதில் அர்த்தமில்லை.முஸ்லீம் அல்லாதவர்கள் சாப்பிடுவதை பார்த்து உன் நோன்பு குலையுமானால் முஸ்லீம் அல்லாதவர்களை குறை சொல்வதில் என்ன நியாயம்.ஆனால் நோன்பிருக்கும் ஒரு முஸ்லீம் முன்னால், முஸ்லீம் அல்லாதவர் ஒருவர் வேண்டுமென்றே சாப்பிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அதற்குப் பெயர்தான் அடாவடித் தனம் என்பது.
சத்து மலேசியா என்ற கோட்பாட்டில் இதை எல்லாம் நாம் பொறுத்துப் போகவேண்டும் என பிரதமரும் , துணைப் பிரதமரும் எதிர்ப் பார்க்கிறார்கள் போலும். நமது பிரதிநிதிகள் எனச் சொல்லிக்கொண்டு அமைச்சரவில் இருக்கும் தலைவர்கள் பதவிச் சண்டைப் போட்டுக்கொண்டு திரிகிறார்கள் அவர்களுக்கு இதையெல்லாம் கண்டுக் கொள்ள எங்கே இருக்கு நேரம்…?
பழனிவேலுவா? சுப்ரமணியம்மா? இந்த இரண்டு தென்கனாமுட்டிகலுமே மல்லுகட்டிக் கொண்டு நிற்கிறார்கள் பதவி சுகத்துக்காக.சமுதாய பிரச்சனைகள் இவர்களுக்கு முக்கியமல்ல.பதவியின் மூலம் கிடைக்கும் மானியமே இவர்களுக்கு முக்கியம்.மக்கள் சக்தி தனேந்திரன் போல.இவர்களுக்கு அடுத்த தேர்தலில் ” அரோகரா!….”
வருஷம் வருஷம் இதே பிரச்னை , அந்த காலத்தில் இப்படி இல்லையே . நோம்பு இருப்பவர்கள் இருக்கட்டும். யாரும் இருக்காதே என்று அடித்தார்களா, கழிவறையில் சாப்பிட சொன்னவர்கள் . முதலில் அவர்கள் சாப்பிட்டு விட்டு , பிறகு கல்வி அமைச்சரையும் சாப்பிட சொல்லி பிறகு மற்ற வரை சாப்பிட சொல்லட்டும்………………
வருஷம் வருஷம் இதே பிரச்னை , அந்த காலத்தில் இப்படி இல்லையே . நோம்பு இருப்பவர்கள் இருக்கட்டும். யாரும் இருக்காதே என்று அடித்தார்களா, கழிவறையில் சாப்பிட சொன்னவர்கள் . முதலில் அவர்கள் சாப்பிட்டு விட்டு , பிறகு கல்வி அமைச்சரையும் சாப்பிட சொல்லி பிறகு மற்ற வரை சாப்பிட சொல்லட்டும்………………
தமிழ்ப்பள்ளி இருக்கும் போது உன்னை யார் கொண்டு போய் மலாய் பள்ளியில் போடசொன்னது, இப்ப குத்துதே கொடையுதே என்பதா,
இதுதான் ஒரே மலேசிய கோட்பபாடுகள் “அன்று முதல் இன்று வரை மாறவில்லை “இனி மாறப்போவதும்மில்லை அந்த காலத்தைக்காட்டிலும் இப்போது தேசிய ஒருமைப்பாட்டின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது மலேசிய இந்தியர்களின் உணர்வுகளையும் இனமானத்தையும் மதிப்பதில்லை இந்தியர்களைப பிரதிநிதிக்கும் ஒரே காட்சி என்று சவுடால் பேசும் மா இ க ஒரு முதுகு எலும்பில்லா கட்சிஅவர்களால் எந்த பயனும்மில்லை நம் நாட்டில்தான் அறிவு குருட்டு ஆசிரியர்கள் பள்ளிகளில் ஒற்றுமையை விதைக்கவேண்டிய அவர்கள் வேற்றுமையை அழுத்தமாக ஊன்றி விடுகிறார்கள் !!