ஆஸ்திரேலியாவில் மாரா வாங்கிய சொத்துகளுக்கு பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புதல் அளித்தார். அச்சொத்துகள் அதிகப்படியான விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாரா மேற்கொள்ளும் அனைத்து முதலீடுகளுக்கும் நிதி அமைச்சு அல்லது நஜிப்பின் தலைமையில் இயங்கும் அரசாங்க பொருளாதார மன்றத்தின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்று மாரா தலைவர் அனுவார் மூசா கூறினார்.
“இது நடைமுறையின் ஓர் அங்கமாகும்”, என்று கோலாலம்பூர் மாரா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
டட்லி ஹவுஸ் வாங்கியதில் கையூட்டு மற்றும் கூடுதல் விலை கொடுக்கப்பட்டதாக த ஏஜ் கூறியிருந்தது குறித்து மாராவுக்கு எதுவும் தெரியாது. அக்கொள்முதலை செய்தது மாராவின் துணை நிறுவனம் மாரா இங் செண்ட். பெர்ஹாட் என்றும் அவர் கூறினார்.

























கையொப்பம் இட்ட/ இட அனுமதியளித்த அனைவரையும் பிழிந்தால், உண்மை தெரிய வரும். பூமி புத்ராக்களை குறிப்பாக மலாய்க்காரர்களை உயர்த்த நிறுவப்பட்ட மாராவை பயன்படுத்தி பதவியில் உள்ளோர் ஒன்றிணைந்து கொள்ளை அடிக்கின்றனர். இதுவும் பூமிபுத்ராக்கள் 30% பொருளாதார அடைவு நிலையை அடையச் செய்யும் திட்டங்களில் ஒன்றோ?? பூமிபுத்ராக்கள் பெயரில், மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் மாயமாகிறது!!!
ஆமாம்! இப்படி எல்லாம் குறைச்சொல்லிக் கொண்டிருந்தால் அப்புறம் மலாய்க்காரர்களை எப்படித்தான் முன்னேற வைப்பது? மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதும் முன்னேற்றத்தின் ஒரு பகுதி தானே!
பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியது என்பதால் இந்தக் கொள்முதலில் அத்துமீறல் நடந்திருக்காது என்பதை நாங்கள் நம்ப மாட்டோம். எங்கும் எதிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. நாட்டு மக்கள் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இயற்கை வளமே இல்லாத அருகில் உள்ள சிங்கப்பூர் மக்கள் சுபீட்சத்தை அனுபவிக்கும்போது, மலேசியாவில் சராசரி மக்கள் தங்கள் ஜீவனத்துக்காகத் திண்டாடும் நிலையில், இப்படியொரு (மெல்பொர்னில் மாரா சொத்து கொள்முதலில் அத்துமீறல்) செய்தியைக் கேள்விப்படும்போது நம்ப வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறோம். எங்கும் ஊழல், எதிலும் ஊழல்…. இந்த மனக்குமுறலைக் கொட்ட நினைத்தால், ‘உங்களுக்கு விருப்பமில்லையென்றால் வேறு நாட்டுக்குச் சென்று விடுங்கள்’, என்ற அடாவடி பதில்தான் வரும். கொஞ்சமும் மனசாட்சி கிடையாது…. மலையளவு பேராசை…… இப்படியே இந்த தேசத்தை மயானக்காடாக்கி விடுவார்கள் போலும்!
ஜி எஸ் ட்டி என்ற போர்வையில்பாமர மக்களை நாசிக்கி புழிந்து எடுக்கும் இந்த அரசாங்கம் மெல்போர்னில் மாராமுதலீடு அதுவும் நம்பிக்கை நாயகனின் தலைமையில் மாரா முழுக்க முழுக்க ஒரு இனத்திற்கே சொந்தமானது .இந்த கோன்முறை மக்களை மடயராக்குகிறது மக்கள் வைத்தேறிசசல் வீண் போகாது பதில் சொல்லும் நேரம் வரும்!