பிகேஆர், டிஏபி. பாஸ் முற்போக்காளர்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிழற்படமொன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.
அப்படத்தைப் பதிவிட்டிருந்த சிபூத்தே எம்பி தெரேசா கொக், அது நேற்றிரவு பாஸ் தும்பாட் எம்பி கமருடின் ஜாபாரின் வீட்டில் நோன்பு திறக்கும் நிகழ்வின்போது பிடிக்கப்பட்டது என்று கூறினார்.
“பாஸ் காங்கிரஸ் டிஏபியுடன் உறவுகளை குறித்துக்கொள்ள முடிவு செய்தது, ஆனால் இன்றைய இரவு பக்கத்தான் 2.0 பிறக்கப்போகிறது என்ற நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.
அப்படத்தில் முன்னாள் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், முன்னாள் பாஸ் உதவித் தலைவர் சாலாஹுடின் ஆயுப், ஷா ஆலம் எம்பி காலிட் சமட், சுங்கை பட்டாணி எம்பி ஜோகாரி அப்துல், பாடகர் வான் அய்ஷா, பிகேஆர் உதவித் தலைவர்கள் தியான் சுவா, ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் ஆகியோர் காணப்பட்டனர்.
பாஸ் முற்போக்காளர்களைக் கொண்ட ஜி-18 அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ததாக ஷம்சுல் தெரிவித்தார்.

























நல்லதே நடக்கட்டும்!!!
புத்தம் புதிய புத்தகத்தைப் பார்ப்போம் அதில் PSM – ம் சேர்ந்து இருக்க பார்ப்போம். PKR – ம் DAP – ம் எல்லாம் எமக்கே என்று இராமல் அனைவரையும் அனைத்துச் செல்லும் கூட்டணியாக இருக்கட்டும். இல்லையேல் இவர்களுக்கும் ஆப்பு அடிக்க வேண்டி வரும். தற்சமயம் நமக்காக எதிர் கூட்டணியில் பேச எந்த ஒரு நாதியும் இருப்பதாக தெரியவில்லை.
சீனரும் மலாய் மக்களும் உள்ளனர் .எங்கே ஒரு தமிழனும் அங்கு இல்லை ? இதுதான் கூடனியா ? ஜ செ க பல இன கட்சி என்று சொல்லும். அனால் இன அடிபடையில் செயல்படுவதுதான் ஜ செ க .
இந்த படம் அதனை நிருபிக்கிறது. பல தமிழர்கள் ஜ செ க நாடாளுமன்ற,சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தும் , சீனர்கள் தான் ஜ செ க வை பிரதிநிதிகின்றனர் என்பதுதான் உண்மை.இங்கேயும் தமிழர்கள் உரிமைகளை தட்டி கேட்க முடியாது வேதனைதான்.
அன்று பெர்சே(BERSIH) 2.0……பிறகு…. நாசிலேமக்(NASI LEMAK ) 2.0…..இப்பொழுது பாக்கத்தான்2.0….நாளை ஆட்சி கைக்கு வந்தால் …அரசாங்கம் (GOVERNMENT ) 2.0 ……எதுக்கு டா இந்த ரெண்டுங்கெட்டான் பொழப்பு……இன வெறியன்களும் (DAP )….மற்றும் மத வெறியர்களும் (PAS ) …..இருக்கும் வரை பாக்கத்தான் $%சு………………
நிழற்ப்படத்தில் ஒரூ தமிழ் முகமும்
இல்லையே.கறைபடியாத,சிறந்த
பேச்சாளரைக்கொண்டு ஒரூபுதிய
பதிவுப் பெற்ற கட்சி ஆரம்பிக்கப்பட
வேண்டும்.முன்று ஆண்டுகளக்குப்
பிறகு வரும் தேர்தலில் நாமும் ஒரூ
சக்தியாக பிரதிபலித்தால் நிழற்படத்தில் தமிழ் முகம்வரும்.
அறிவுஜீவிகள் முன்வருவார்களா?
உக்கரபாண்டியன்.வீரலேச்சிமி
நம்நாட்டில் இல்லையா?.