அன்வார் குடும்பத்தார், அவர்களின் கோரிக்கையை நிராகரித்த மன்னிப்பு வாரியம் அதன் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும் மனுவை இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
சட்டத்துறை தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் அன்வாரின் வழக்கில் சம்பந்தப்பட மாட்டார் என்று அப்துல்லா படாவி பிரதமராக இருந்தபோது உத்தரவாதம் அளித்திருந்தார் ஆனால் மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் ஏஜி கலந்துகொண்டார். அதை அடிப்படையாக வைத்து அவர்கள் அம்மனுவைச் செய்துள்ளனர்.
மன்னிப்பு வாரியத்தின் மார்ச் 16 முடிவை இரத்துச் செய்து வாரியம் மறுபடியும் கூடி எல்லா விவகாரங்களையும் சீர்தூக்கிப் பார்த்து பொருத்தமான ஆலோசனையைப் பேரரசருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றவர்கள் அம்மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


























நல்லது நந்தால் சரி.
அரசியல் இதெல்லாம் சகஜம்பா. நீங்கள் வெளியே வந்தாலும் தமிழர்களின் நிலை மாறபோவது இல்லை.மக்கள் கூடனியில் உள்ள தமிழர்களும் சுயநல அடிபடையிலேயே உள்ளனர்.மேலிடம் சொல் கேட்டு வாய் மூடி மௌனமாக உள்ளனர்.
மாமாவுக்கு பயம் வந்து விட்டது…கூட்டனி உடைந்த தேங்காய் ஆகிவிட்டது…மிஞ்சி இருப்பது அக்கா aziza பதவி மட்டும்தான் ..அதுவும் போச்சினா..டண்டனக்கா டணக்கணக்க தான்…இவர் வெளியே வந்து மட்டும் நமக்கு என்னத்த செஞ்சி கிழிக்க போறாரு..
தர்பூது மகாதிர் கொஞ்சம் கப்சிப் ஆனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்