புதிய இஸ்லாமியக் கட்சி ஒன்று விரைவில் உருவாகலாம். அதன் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவருமே அதில் உறுப்பினராகலாம்.
பாஸைப் போல் அல்லாது புதிய கட்சியின் நோக்கங்கள் ஊழலை எதிர்ப்பது, நீதிக்காகப் போராடுவது போன்று வாழ்வியல் சம்பந்தப்பட்டவையாக இருக்கும்.
ஆனாலும், இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அக்கட்சி செயல்படும் என பாஸ் எம்பி காலிட் சமட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“எல்லாரையும் அரவணைப்பதே எங்கள் அணுகுமுறை. முஸ்லிம்களும் முஸ்லிம்- அல்லாதாரும் எங்களுடன் சேர்ந்து ஊழலை எதிர்க்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இதற்காகத்தான் (காலஞ்சென்ற பாஸ் தலைவர்) பாட்சில் நூரும் பாடுபட்டார்.
“இது இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய போராட்டம். ஆனால், போராட்டத்தின் அடிப்படையை ஏற்றுக்கொள்ள முஸ்லிம்- அல்லாதார் தயராராக இருந்தால் ( அவர்கள் கட்சியில் சேர்வதில்) பிரச்னை இருக்காது”, என்றாரவர்.


























ஊழலை எதிர்ப்பது, நீதிக்காகப் போராடுவது போன்ற போராட்டங்களுக்கு இஸ்லாமிய அல்லாத கட்சிகளும் தான் போராட்டம் நடத்துகின்றன. இஸ்லாமியர்களே அதிகம் ஊழல் செய்வதால் அதற்கு இஸ்லாமியக் கட்சிகள் தான் போராட வேண்டும் என்பதில்லையே!
இஸ்லாமிய கட்சியா? ஹா ஹா – விடியும்.
பாஸ் கட்சியில்லிருந்து வந்த நீரும் , ஒரு பெருங்காய டப்பாதான்!
ஊழலை எதிர்ப்பது, நீதிக்கு போராடுவது , முஸ்லிம் ,மற்றும் முஸ்லிம் அல்லாதார் தயாராய் இருப்பார்கள் . ஆனால் …… ? கட்சியின் கொள்கைகளை வகுப்பது , வழி நடத்துவது உலாமாக்கள் கையில் இருக்ககூடாது !!!!!!!
கலிட் சமாட்டிடம் இது மலைகாரர், முஸ்லிம் பிரச்சனை என்று சொன்னால், இல்லை இது மலேசியரின் பிரச்சனை என்பாராம் ! மிகவும் தெளிவான மனிதர் ! உலாமாக்களை எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் கேள்வி ?
இவன் ஒரு பட்சொந்தி
இவன் ஒரு பாஸ் பட்சொந்தி
ஊழல் இஸ்லாமிய கோட்பாட்டில் தப்பு என்றால் ,,, அவர்கள்தானே அதை செய்கிறார்கள் ,,,,மத கோட்பாடு தெரியாத மரமண்டை இஸ்லாமியர்களா அவர்கள் ,,,,,அப்புறம் ஏனய்யா இஸ்லாமிய கோட்பாடு கொண்ட கட்சி ,,,, மக்கள் நலம் காக்கும் கட்சியமைத்தால் ,,, இஸ்லாமிய சரியா கோர்ட் நீதிபதியே ,,, இலஞ்சம் வாங்கியதற்காக ,, ஆறு வருஷம் கம்பி எண்ண ஆரம்பிச்சிட்டான் ,,,,