ஆஸ்திரேலியாவில் சொத்துகள் வாங்கியதில் ஊழல்கள் நிகழ்திருப்பதாகக் கூறப்படுவதன்மீது அந்நாட்டுப் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மெல்பர்ன், வெர்மண்ட் சவுத்-இல் உள்ள ஒரு வீட்டைச் சோதனையிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உதவியாக கணினிகளையும் கோப்புகளையும் கைப்பற்றியதாக ஆஸ்திரேலிய நாளேடான த எஜ் கூறியது.
ஆஸ்திரேலிய போலீசார் ‘ஒபரேசன் கரம்போலா’ என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக “ஆஸ்திரேலியாவில் பல-மில்லியன் டாலர் சொத்துகளை வாங்குவதன் மூலமாக மலேசியர்கள் பணச்சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை” விசாரணை செய்து வருவதாக அது கூறிற்று.
அதில் மாரா சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் மாரா தலைவர் அனுவார் மூசாவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

























பிரதமருக்கு நேரமே சரியில்லை! எத்தனை எத்தனை ஊழல்கள்! போதுமடா சாமி!
இவனுங்க எதையும் விட்டுவைக்க மாட்டானுங்க போலிருக்கு !
மக்களுக்கு நல்ல நேரம். ஊழல் அரசாங்கம் உருளப் போகின்ற நாள் நெருங்கி விட்டது என்று கண்ணுக்கு வெளிச்சமாகத் தெரிகின்றது.
ஊழல் பெருச்சாளிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்பு ,,, நாட்டை விட்டு வெளியேறி ,,,,, வெளிநாட்டில் சென்று கோடீஸ்வர வாழ்க்கை வாழ்வார்கள் ,,,,கேஸ் closed…..
இது சின்ன விஷயம் .இன்னும் அண்டா விஷயம் எப்ப வரும்????
இந்த விவகாரத்தில் மலேசியா போலிஸ் ஆஸ்திரேலியா போலிசுக்கு உதவ தயாராக இருக்கிறதாம்!!! ஆஸ்திரேலியா உதவி கேட்டுச்சா?? ஏன் அதுக்குள்ளே முந்திரிக் கொட்டை மாதிரி?? யாருடைய ஐடியா? போலிஸ் மட்டுமென்ன, உள் துறை அமைச்சர், AG, தலைமை நீதிபதி, அம்னோ வழக்குரைஞர் எல்லாரையும் கூட்டிட்டு போங்க அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். கையோட கை வச்சி அமுக்கி தில்லுமுல்லா பண்ணவா?? ஏன், எல்லா செலவையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லுங்களேன்! இங்க உள்ளதையே புடுங்க முடியிலே, அங்கே கிழிக்கப் போறான்களாம்!!!