சுங்கைப் பட்டாணியில் மூத்த ஆசிரியர் ஒருவர் முஸ்லிம்- அல்லாத மாணவர்களை நோன்பு மாதத்தில் தண்ணீர் அருந்துவதென்றால் கழிப்பறையில் சென்று அருந்தும்படியும், கழிப்பறையில் நீர் அருந்தும்பொழுது சிறுநீரை அருந்திவிடாதீர்கள் என்றும் முட்டாள்தனமாகக் கூறி வைத்ததைச் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலோர் கண்டித்துள்ளனர்.
கெராக்கான் உதவித் தலைவர் ஏ.கோகிலன் பிள்ளை ஆசிரியருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை தேவை என்றார். ஆசிரியரின் கூற்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கெடா கல்வி அமைச்சு கூறிய “சாக்குப்போக்கு” ஏமாற்றமளிப்பதாகவும் அவர் சொன்னார்.
வளரும் பிள்ளைகளிடம் பொருத்தமற்ற முறையில் ‘ஜோக்’கடித்த ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே கெராக்கானின் நிலைப்பாடு என கோகிலன் கூறினார்.
“இதற்குமுன் நோன்பு மாதத்தில் நிகழ்ந்த சம்பவங்களைக் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டதா அல்லது முஸ்லிம்- அல்லாத மாணவர்கள் இன்னமும் கழிப்பறையில்தான் உணவருந்த வேண்டுமா?”, என்றவர் வினவினார்.

























தெரியாமல்தான் கேட்கிறேன். நோன்பு மாதம் புனிதமானது என்கிறார்கள். நோன்பு மாதத்தில் மட்டும் ஏன் இந்த ‘குசும்பு’? டண்டணக்கா……..ஏய் ……டண்டனக்கா ……..[சும்மா தமாஷுங்கோ!]
பாரிசான் முதல் தமிழ் அரசியல்வாதி தமிழ் மாணவருக்காக வாயைத் திறந்துள்ளார். என்ன நடக்கப் போகுறது என்று பார்ப்போம்…
நோன்பு மாதம் புனிதமானது தான். மாதம் புனிதமானது என்பதற்காக மனிதனும் புனிதமாக இருக்க வேண்டிய அவசியமில்லையே!
ஆஹா கோகிலா திடிரென்று புயல் விசுது . அடுத்த தேர்தலில் போட்டியிட அறிகுறியோ. உங்களுக்கு தெரியும் என்னதான் சத்தம் போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்று. அமைதியா அமர்ந்து அடுத்த தேர்தலில் சீட் கிடைக்க வழி பாருங்கள் கோகிலா.
தமிழனை கண்டால் உங்களுக்கெல்லாம் …..
வந்துட்டாரு ஜாதி கட்சி தலைவரு நம்ம பிள்ளை ,,போடா டேய்
உற்க்கதில்லிருந்துஇப்போதுதான் விழிதீர்களா? சரி உங்கக்கடமைக்கு நீங்களும் ஒரு அறிக்கை விட்டு செல்லுங்க நம் சமுதாயம் நன்றாக விளங்கிடும் !