அரசியல்வாதிகள் முதலில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஜோகூர் பட்டத்திளவரசர் கூறியிருப்பதை ஜோகூர் அம்னோ இளைஞர் துணைவர் கைருல் அன்வார் ரஹ்மாட் வரவேற்கிறார்.
“இஸ்லாம் நம் கருத்துகளையே வெறித்தனமாக பற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்றோ மற்றவர்களின் கருத்துகளுக்கெதிராகக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் என்றோ சொல்லவில்லை.
“நற்பேறும் நிறைவளமும் கொண்ட நாட்டை உருவாக்க வேண்டுமானால் தன்னலங்களையும் குறுகிய அரசியல் சித்தாந்தங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும்”, என்று கைருல் அன்வார் ஓர் அறிக்கையில் கூறினார்.
‘Nothing2Hide’ ஏற்பாட்டாளருமான கைருல் அன்வார் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமை ஆதரித்து அறிக்கை விடுத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

























நல்லதை யார் சொன்னாலும் வரவேற்போம்! முடிந்தால் ஜோகூர் இன்னொரு சிங்கப்பூரைப் போல வளர வேண்டும்!
ஒரே நாளில் உத்தமனாக்கி விட்டார்கள் அறியாமையில்.