பொதுக் கணக்குக் குழுவின் வேலையில் தலையிட வேண்டாம் என அக்குழுவின் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட் அம்னோ-தொடர்புடைய வழக்குரைஞர் ஷாபி அப்துல்லாவை எச்சரித்துள்ளார்.
மலேசியாகினியிடம் பேசிய நூர் ஜஸ்லான், 1எம்டிபி-யைக் கடுமையாகக் குறை கூறுவதற்காக புவாவைக் குழுவிலிருந்து வெளியேறுமாறு கூறும் உரிமை ஷாபிக்குக் கிடையாது என்றார்.
“அரசாங்கத்தின் மூன்றாவது கிளையான நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாகிய பிஏசி உறுப்பினர்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வெளியேறச் சொல்லும் உரிமை அவருக்கு(ஷாபி) இல்லை”.
பிஏசி-யில் தெரிவிக்கப்படும் தகவல்களை புவா தம் அறிக்கையில் பயன்படுத்திக்கொண்டதில்லை என்று கூறிய நூர் ஜஸ்லான் உண்மையில் அவர் 1எம்டிபி பற்றிய முக்கியமான விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார் என்றார்.

























உண்மையை சொல்லும் நீதிபதிகளை எல்லாம் நீக்கி விட்டு ஜால்ராக்களை கொண்டு நீதி வழங்கும் நாட்டில் வேறு எதையும் எதிர்பார்க்க முடியுமா?. ஊழலின் ஊற்றுக் கண்கள் கொண்ட நாடு என்ற பட்டப் பெயர் தகும்.
அண்ணாச்சி! சரியா சொன்னிங்க! சரியா சொன்னா உங்களுக்குச் சீக்கிரம் “ஆப்பு” தெரியும் தானே!
இங்க அவரு பருப்பு வேகலை ………ம் ம் ம் வேற இடம் பார்போம்
பொது கணக்குக் குழு விசாரணையையும் அம்னோ வழக்கு விசாரிக்கும் நீதிமன்றம் என்று நினைத்துவிட்டாரோ???
சேவியர் ஜாஸ்டோ தாய்லாந்தில் கைதான பின்னியை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். அனைத்துலக கைது ஆணை, மின்னஞ்சல் செய்தி திரிக்கப்பட்டது என்று வெளியான செய்தியின் உறுதிப் படுத்தப்பட்ட உண்மை நிலவரம், அதன் பின்னணி எல்லாவற்றையும் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து பார்த்த பின் எதையும் உறுதியாக சொல்ல முடியும். அதுவரை எல்லாமே அரசியல் கண்ணாம்மூச்சி விளையாட்டுபோல் தெரிகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்களுக்கு வேண்டியதெல்லாம் உண்மை நிலவரம்..