ஜொகூர், மாசாய்யிலுள்ள ஒரு கோப்பிக் கடையில் நடந்த ஒரு டிஎபி நிகழ்ச்சியில் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை பேச விடாமல் தடுக்க முயன்றனர்.
நிகழ்ச்சி பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கிய சிறிது நேரத்தில் 50 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தினர் அந்த இடத்தில் புகுந்து பிளாஸ்டிக் குவளைகளையும், மங்குகளையும், ஒரு கூட்டுமாறையும் கூட அவர்கள் கிட் சியாங்ஙை நோக்கி வீசினர்.
அங்கிருந்தவர்கள் கிட் சியாங்ஙை சுற்றி ஒரு பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்தினர். லிம்முக்கு எந்த காயமும் ஏற்படவில்லஙென்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.
“பாலிக் கிட் சியாங்”, “பாபி”, “கம்யூனிஸ்ட் அனுதாபி” மற்றும் “மாம்புஸ்” என்று அக்கூட்டத்தினர் கத்தினர் என்று இவற்றை கேட்ட ஒருவர் மலேசியாகினியிடம் கூறினார்.
குறைந்த எண்ணிக்கையிலான போலீஸ்காரர்கள் அங்கிருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் இயலவில்லை.
சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்த இக்கூட்டத்தினரின் அட்டகாசம் அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கிட் சியாஙை அங்கிருந்து அழைத்துச் சென்ற பின்னர் அடங்கியது.
மந்திரி புசார் பொறுப்பேற்க வேண்டும்
இச்சம்பவம் தொடங்கிய போது அக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சிங் தோங் தாக்குதல் நடத்திய கும்பலில் பாசிர் கூடாங் அம்னோ தொகுதி உறுப்பினர்கள் இருந்ததை தாம் அடையாளம் கண்டதாக கூறினார்.
அவர்கள் நாற்காலிகளை உடைத்தனர், தண்ணீர் போத்தல்களையும் மங்குகளையும் வீசினர் என்று கூறிய லியு, இதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சியை நிறுத்துவதற்காக தாமான் மேகா ரியா மசூதியில் கூடுமாறு டெக்ஸ்ட் செய்திகள் அனுப்பப்பட்டிருப்பதாக தமக்குத் தெரிவிக்கப்பட்டது என்றார்.
அங்கிருந்த போலீசார் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கையை லியு பாராட்டினார்.
இச்சம்பவத்திற்கு ஜொகூர் மந்திரி புசாரும், பாசிர் கூடாங் அம்னோ தலைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று லியு வலியுறுத்தினார்.
இது குறித்து போலீஸ் புகார் செய்யப் போவதாகவும், ஜொகூர் போலீஸ் தலைவர் இத்தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் லியு கூறினார்.
இதுதான் அமீனோ அராஜகம். இதற்கு துணை போவோர், ம.சி.ச. கெரக்கான், சுப்ரமானவரின் ம.ஈ.க.!. இதற்குப் பெயர் தேங்காய் முன்னணி!.எங்கே அந்த சாந்தி மாங்காய்?.
அம்னோவின் அழிவு நிச்சயம்.
அடக்க முடியாத குண்டர் கலாச்சாரம் இப்பொழுது அம்னோவில் தலைவிரித்தாடுகிறது ,எதிரணிக்கு எதிராக திட்டமிட்டு வன்முறையை ஏவிவிடும் கலாச்சாரத்தை அம்னோ பின்பற்றுகிறது என்பதை பல சம்பவங்கள் உணர்த்துகிறது .தற்பொழுது ஜனநாயக கட்சியின் லிம் கியாட் சிங்கின் மீது தொடுக்க பட்ட திட்டமிட்ட இந்த வன்முறையும் .போலிஸ் தலைவர் எதிரணிக்கு எதிராக பணிக்கும் உத்தரவுகள் ,அம்னோ அல்லது நட்பு மத்திய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மீது சட்ட உத்தரவுகளை இடுவதற்கு மெத்தன போக்கை பின்பற்றுகிறார் என்பதை அவரது நடவடிக்கையில் இருந்து தெரிகிறது .தற்பொழுது நடந்த இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு போலிஸ் தலைவரின் துரித அல்லது பத்திரிகை அறிக்கை நிச்சயமாக …போலிஸ் விசாரணையை முடக்கி விட்டு உள்ளனர் ,அல்லது விசாரணை நடைபெற்று இருக்கிறது என்பதாகத்தான் இருக்கும் ,அதன் பிறகு சத்தமே இல்லாமல் இந்த விவகாரம் அமிங்கிவிடும் அல்லது மறைக்க பட்டுவிடும் .அதே எதிரணி தலைவர்களை விசாரனைக்கு வரசொல்லி காவல் நிலையத்தில் கைது செய்து தடுவைப்பது ,அல்லது அந்த தலைவர்கள் எங்கிருதலும் அது காரில் வெளிமாநிலத்தில் பயணம் செய்தலும் கடும் குற்றவாளியை போல் நடுரோட்டில் கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது .இது ஜனநாயக நாடு சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதெல்லாம் வெறும் ஜனநாயக சட்ட கொலையாக கருத தோன்றுகிறது .குறிப்பாக போலிஸ்தலைவரின் செயல்பாடுகள் குறித்து அல்லது அவரின் அமலாக்க உத்தரவுகள் குறித்து ஒரு சுயேச்சை கண்காணிப்பு குழுவை மலேசியே அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் .அதில் எதிரணி தலைவர்களும் இடம்பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கவேண்டும் .
சட்டம் அதன் கடமையை செய்யும்…. நம்புங்கள்… கவலை வேண்டாம்…
இவைகள் அனைத்தும் அம்னோ வளர்க்கும் வெறிநாய்கள்,யாரை கடிப்பது,எப்படி கடிப்பது என்பதற்கான தனி training and many training அளிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டு நீதி தேவதை எங்கே ஒளிந்து கொண்டால் ? ஆளும் bn அரசுக்கு ஏதாவது எதிர்ப்பு நடந்தால் மட்டும், உடனே கையில் நீதி தராசுடன் ஓடி வருவாளோ ?
புனித மாதமான நோன்பு மாதத்தில் மற்றொருவரை நோக்கி “BABI” | “MAMPUS” என்று கூறி இஸ்லாத்தை வளர்க்கும் அற்புத முஸ்லீம்கள்
வாழும் நாடு மலேசியா என்பதை நிருபித்து விட்டீர்கள்.
அது சரி, “BABI” “HARAM” என்றால் அந்த வார்த்தையை ஒரு முஸ்லீம் பயம்படுத்தும்போது, அந்த முஸ்லீம் “HARAM”-மா | “HALAL”-லா ?
சிலாங்கூரில், துடைப்பத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு பரிசாகக் கொடுத்து பதவி இழந்த மந்திரி பெசாரின் தாக்கத்தில் இருந்து அமீனோ இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள் ஜோகூரில் துடைப்பத்தை தூக்கி விட்டார்கள். அடுத்த தேர்தலில் ஜோகூரிலும் அமீனோ கவிழப் போகின்றது என்பதற்கு இது முன் அறிகுறியோ?. யானை வரும் பின்னே மணி ஓசை வருகின்றது முன்னே.
இதெல்லாம் யார் செய்து இருப்பார்கள் என்று தெரியாதா? இவன்களின் அட்டகாசம் தலைக்கு மேல் போய் கொண்டிருக்கிறது– ஆனால் யார் கேட்டு என்ன ஆகபோகுது? எல்லாம் மேலிருந்து வந்ததுதான்– ஆட்களை ஏவி விட்டு செய்யும் அட்டூழியம்,
அம்நோவால் உருவாக்கப்பட்டு அரசாங்கத்தில் பதிவு பெற்ற குண்டர் கும்பல் உள்ளதே ,,,, மூன்று கோடுகள் ,,, அவர்களுக்கு அராஜகம் செய்ய உரிமை உன்டு,,,