தங்கள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் அம்னோ உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு கேட்டுக்கொண்ட கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். அம்னோ கட்சியினர் தலைமைக்குப் பிளவுபடாத விசுவாசத்தைக் காட்டிட வேண்டும் என்றார்.
குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சிறந்த நடவடிக்கை எடுப்பதற்கு நஜிப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“இப்போதைய நிலவரத்தில் நாம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். நமக்குப் பாதுகாப்பாக விளங்கும் நம் ஒற்றுமையை ஒழிப்பதற்கு, மற்றவர்கள், குறிப்பாக எதிரணியினர் காத்திருக்கிறார்கள்.
“அவர்களின் சூழ்ச்சிகளுக்கும் தூண்டுதல்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது”, என்று தெங்கு அட்னான் ஓர் அறிக்கையில் கூறினார்.

























மக்களை நம்ப வைக்க முடியல. கட்சி உறுப்பினர்களையாவது நம்ப வைக்க முடியுமா என்று கணக்கு போடுகின்றார். ஊஹும். போற போக்கைப் பார்த்தால் அதுவும் முடியாது போலிருக்கு.
அட துப்புக் கெட்ட துங்கு அட்னான்…! பிரதமரை பதவி விலகி செல்ல வலியுறுத்துங்கள்…?
நீ இவ்வளோ துடிக்கிரனா அப்பா அந்த மறைக்க பட்ட 3 வங்கி கணக்கு உன்னொடயா………… துங்கின அட்னான்………….