எதிரணி எம்பிகள் துணைப் பிரதமர் முகைதின் யாசினைச் சந்தித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை விடுப்பில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.
“எதிரணி எம்பிகள் துணைப் பிரதமரைச் சந்திக்க வேண்டும். அவரிடம் பிரதமரை விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்துங்கள் என வலியுறுத்த வேண்டும்”, என நெகாரா கூ என்ஜிஓ-வின் புரவலரான எஸ்.அம்பிகா கூறினார்.
நஜிப்புக்கு எதிராக புலன் விசாரணை நடப்பதால் அது நியாயமான முறையில் நடப்பதற்கு இது அவசியம் என்றாரவர்.
ஓராண்டுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவதுகூட நல்லதுதான் என அந்த முன்னாள் பெர்சே தலைவர் கூறினார். அது ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிப்பதுபோல் இருக்கும் என்றாரவர்.
இன்று நாடாளுமன்ற சதுக்கத்தில் எதிரணி எம்பிகளும் என்ஜிஓ பேராளர்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியபோது அம்பிகா இவ்வாறு கூறினார்.

























வாழ்துக்கள், நல்ல ஆலோசனை .
இதெல்லாம் நடக்கின்ற காரியமா?. மக்களாகப் பார்த்து தெருவுக்கு வந்து ஜனநாயகமாக அந்த அமீனோ கட்சியை வீட்டிற்கு விரட்டுவதே சாலச் சிறந்தது.