அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டிபி நிதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
வால் ஸ்திரிட் ஜர்னலின் கூற்று கடுமையானது என்பதால் அதை விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் அவசியம் என எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
“அதில் பேங்க் நெகாரா கவர்னரும் சட்டத்துறைத் தலைவரும் கலந்துகொண்டு அவ்விவகாரம் மீதான விசாரணைகள் பற்றி விவரிக்க வேண்டும்”, என வான் அசிசா கூறினார்.
“விசாரணை முடியும்வரை பிரதமர் விடுப்பில் செல்ல வேண்டும்”, என நாடாளுமன்றத்தில் எம்பிகளும் என்ஜிஓ பேராளர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

























மக்களுக்காக தன்னையே அற்பணிக்கும் குணம் கொண்ட நம் பிரதமர் எப்படி மற்றவர்களை நம்பி விடுப்பில் செல்வார் ???
நஜிப் அவர்கள் சுயமாக பதவி விலகி செல்வதே சிறப்பாகும்…! இதற்குமேலும் இருந்து அவமானப் பட வேண்டுமா…?
என்னதான் முட்டி மோதினாலும் அவர் பதவி விலக போவது இல்லை. நேரம் வீணாக்காமல் அடுத்த பொது தேர்தலுக்கு இப்பொழுதே வேலையை தொடங்குங்கள். அணைத்து மாநிலம் சென்று உங்கள் தேர்தல் நடவடிக்கை செயல்படுத்துங்கள்.
அட கூருகட்டவனுங்க்கலா…