பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரிம2.6 பில்லியன் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தியுடன் தொடர்புள்ள ஆவணங்களை வெளியிடப்பட்டிருப்பது குறித்து போலீசார் வால் ஸ்ட்ரீட் ஜார்னலிடம் விசாரணை நடத்துவர்.
கணினிச் சட்டத்தின்கீழ் WSJ-இடம் விசாரணை நடத்தப்படும் எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
“வால் ஸ்திரிட் ஜர்னலை விசாரிப்போம்”, என்று தெரிவித்த அவர், அவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளும் விசாரிக்கப்படுவார்கள் என்றார்.
“தனிப்பட்ட ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வங்கித் தகவல்களைக் கசிய விடுவது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம். அது பொருளாதாரக் கீழறுப்புக்கு ஒப்பாகும்”, என்றாரவர்.
அந்த வகையில் பொருளாதாரச் சதியை நோக்கமாகக் கொண்ட செயல் என்ற முறையில் குற்றவியல் சட்டம், பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழும் விசாரணை மேற்கொள்ளப்படும் என காலிட் தெரிவித்தார்.

























எவன் உண்மையை வெளியே கொண்டு வருகின்றானோ அவனிடமே நுங்கு, நுங்குன்னு நுங்கிட்டு இருப்பீங்க. நீங்களா எந்த ஒரு திருட்டையும் கண்டு பிடிக்க மாட்டீங்க. திருட்டை கண்டு பிடுச்சு சொன்னா அந்த திருடனை எப்படி வெளியே விடுவது என்றுதான் உங்கள் நோக்கமும் செயலும் இருக்கும். அதற்குதான் காவல்துறையை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை என்ற முடிவுக்கு பெரும்பாலான பொது மக்கள் வந்துதுட்டாங்க.
கொள்ளை அடித்தவனை பிடிக்காமல் , காபாற்றியவனை பிடிக்கிறான் … அறிவு கெட்ட சமுதாயம்
கதை வேறு மாதிரி போகிறது ? உண்மையை கண்டு பிடிக்காமல் , யார் இந்த தகவலை கசிய விட்டது என்று மூளை கசக்கி பிழிகிறார்கள் ? அமோகம் , வாழ்க AG
இது காகாதிமிர் படித்து கொடுத்த பாடம்- யார் உண்மை பேசுகிறாரோ அவரைத்தான் கொடுமை படுத்த வேண்டும் — ஏனெனில் இவன்களின் தில்லு முள்ளு வெளியாகி விடுமே– வெளியானாலும் பெரிதாக ஒன்றும் நடந்து விடாது. இது வழி மற்றவர்கள் உண்மை பேச மாட்டார்களே. இவன்களும் கவலை இல்லாமல் கொள்ளை அடிக்கலாமே. இவன்கள் எதைத்தான் ஒழுங்காக செய்தான்கள்? MIC போல் கையால் ஆகாத அறிவிலிகள்- எவனாவது பகுத்தறிவோடு பேசுகிறானா? இவன்களை மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
இப்படியே விசாரணை செய்தே உங்கள் வாழ்கைய வோட்டிடுங்க .
“செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு, செரைக்கிற வேலைக்கு” கிளம்பி விட்டார் போலும் நமது IGP.
மடயங்க மேல இருந்தால் அப்படிதா ஆகும் . அஞ்சடிகரங்க
கையால் ஆகாத கபோதி உங்களால் முடியாத ஒன்றை ஒருவன் கண்டுப்பிடிதுச் சொன்னால் எந்த அளவு உண்மை என்று ஆராய வேண்டும் அதுதான் அறிவுடையவர் செயால் அதை விடுத்தது விஷயத்தைகண்டு சொன்னவனை அங்கலாயக்க கூடாது தும்பியாய் விட்டு வாலை பிடிக்கக் கூடாது நெருப்பில்லாமல் ஒருநாளும் புகையாது !
காவல் காப்பவனே திருடனாக இருந்தால் ,, திருட்டை கண்டு பிடித்தவன் குற்றவாளியாகிவிடுவன் ,,,,,இங்குள்ள சட்டம் ,,,,
மக்கள் ஒரு வெள்ளி கடன் வெச்சா ஒன்பது நோட்டிஸ் வரும் , அந்த ஒரு வேல்லிகே அப்படின்னா இந்த கோடிக்கு எப்படி , இல்லாது பிறவாது அல்லாது குறையாது , இது கலியுகம்டா துனைபோரவன்குட குற்றவாளியே தப்பிக்கவே முடியாது, மாக்களை மிரட்டுறவன் யாராந்தாலும் சரி சங்கே முழங்கு