பிஎன் கடந்த பொதுத் தேர்தலில் வென்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி பிகேஆர் சிவில் வழக்கு ஒன்றைத் தொடுக்கவுள்ளது. 1எம்டிபி பணம் பொதுத் தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறும் வால் ஸ்திரிட் ஜர்னல் செய்தியை அடிப்படையாகக் கொண்டு அது அவ்வழக்கைத் தொடுக்கும்.
“இயன்ற விரைவில்” வழக்கு தொடுக்கப்படும் என பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்தார்.
அச்செய்திகள் பிஎன்னுக்கும் அம்னோவுக்கு நாட்டை ஆளும் தகுதி உண்டா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.
இவ்விசயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது, அதன் “இயல்பு தெரிந்ததே” என அந்த லெம்பா பந்தாய் எம்பி கூறினார்.


























நீதிமன்றத்தை நம்பி நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக எப்படி மக்களை உங்கள் வசம் திருப்ப முடியும் என்ற அரசியல் சாணக்கியத்தைப் பழகிக் கொள்ளுங்கள். நீங்களாவது அடுத்த இளைய பிரதமர் என்ற பட்டப் பெயருடன் உலா வர முடியுமா என்று பார்ப்போம்.
ஆமாம் நியாயம் கிடைக்கும் என்று முச்சந்தியில் தான் உட்கார்ந்து பாக்கணும்.
நியாயம் கிடைக்காது! ஆனால் அநியாயம் நடந்திருக்கிறது என்பது மக்களுக்கு இப்போது பரவலாக தெரியுமே!
எந்த வழக்கானாலும் ஒன்றும் நடக்காது–காரணம் நீதி தேவதை இந்த ஊழல்வாதிகளின் படுக்கை அறையில்.
என் அக்கா மகளே…பார்த்து மா..மாமாவுக்கு பக்கத்துக்கு செல் காலியாதான் இருக்குனு பச்சி சொல்லுது…