எம்பேங்க் நிறுவனர் ஹுசேன் அஹ்மாட் நஜாடி 1எம்டிபி ஊழலை அம்பலப்படுத்த விரும்பினார் அதானல்தான கொல்லப்பட்டார் என்ற வதந்திகளைப் போலீசார் நிராகரித்தனர்.
அக்கொலைக்கும் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் பிரதமர் நஜிப்பின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதற்கும் சம்பந்தம் இல்லை என தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.
“ஹுசேன் கொலை செய்யப்படுவதற்கு முன், எந்த புகாரையும் செய்யவில்லை”, என்றாரவர்.
கேஎல் செண்ட்ரலில் செய்தியாளர்களிடம் பேசிய காலிட், கொலைக்கான நோக்கம் போலீசுக்கு ஏற்கனவே தெரியும் என்றார். கொலைகாரனும் பிடிக்கப்பட்டு கடந்த ஆண்டு தண்டிக்கப்பட்டான்.
இப்போது ஒரு வலைப்பதிவு புதிதாக ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறது.அதைப் படித்துவிட்டு ஹுசேனின் மகனும் அதையே கூறத் தொடங்கியிருக்கிறார் என்றாரவர்.
போலீசார் அந்த வதந்தியின் மூலத்தைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறார்கள். தப்பான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காலிட் கூறினார்.


























“AMBANK” நிறுவனர் ஹுசேன் அஹ்மாட் நஜாடி கொல்லபட்ட தேதி-மாதம்-வருடம் மற்றும் “1 MDB” நிறுவனத்தின் பணம் பிரதமர் நஜிப்பின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் தேதி-மாதம்-வருடம் ஆகியவற்றை IGP விவரமாக கூறினாலே, “தொடர்பு உண்டா ? இல்லையா ? என்பது தெரிந்து விட போகிறது.
இல்லை என்பதின் உள் அர்த்தமே எது இருக்கு என்பதுதான்.
நம் நாட்டில் தப்பே செய்யாதவர்கள் யாரும் தண்டிக்க படுவதில்லையா ?
சரியா சொன்னிரே.
இல்லாமல் போனால் என்ன? சும்மாவாவது பேசுவதற்கும், தப்பபடிப்பதற்கும் எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததே!
பிரதமனுக்கு அல்தான் துயா வின் இறப்பில் தொடர்பு இல்லை என்பது போல்.
திருடனை போயி பார்த்து நீ திருனியா என்று கேட்டால் முதலில் இல்லை என்று தாண்ட்டா சொல்லுவான் ,,குற்றத்தை எந்தகாலத்தில் ஒப்பு கொண்டு இருக்கிறார்கள் ,,,நல்லாவே நடிங்க்கடா நடிப்பிலே உங்களை அடிஹிக்கவே முடியாதுடா ,வேலையாங் கட்டிகள