அரசு நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் (ரிம2.6 பில்லியன்) கையாடல் மோசடி குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக எழுந்துள்ள வேளையில், பிரதமர் நஜிப் ரசாக் ஓர் உயர்மட்ட இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 2 லிருந்து 4 வரையில் புத்ரா ஜெயாவில் நடைபெறவிருக்கும் 16 ஆவது அனைத்துலக இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் (ஐஎசிசி) உரையாற்றவிருக்கும் முக்கியமான நபர்களில் நஜிப்பும் ஒருவராக இருக்கிறார்.
“தண்டனையிலிருந்து விதிவிலக்களித்தல் நிறுத்தப்படுதல்: மக்கள், நேர்மை, செய்கை” என்ற கருப்பொருளைக் கொண்ட அம்மாநாட்டில் சுமார் 800 அனைத்துலக பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு இலஞ்சத்திற்கு தண்டனையிலிருந்து விதிவிலக்களிக்கப்படுவதை நிறுத்துவது பற்றி விவாதங்களையும் பட்டறைகளையும் நடத்தவிருக்கின்றனர்.
உலக அளவில் பெரும் சவாலாக வளர்ந்து வரும் இலஞ்சத்தை கையாள்வதற்கான வழிமுறைகளைக் காண்பதற்காக கூட்டப்படும் இம்மாநாட்டில் அரசாங்கத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தனியார்துறை மற்றும் பல தரப்பினர் பங்கேற்பர் என்று ஐஎசிசி கூறுகிறது.
இம்மாநாட்டில் உரையாற்றவிருக்கும் இதர மலேசியர்களில் துணைப் பிரதமர் முகைதின் யாசின், பிரதமர்துறை நேர்மை அமைச்சர் பால் லவ், மலேசிய இலஞ்ச எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் அபு காசிம் முகமட் மற்றும் டிராஸ்பேரன்சி இன்டர்நேசனல் மலேசியா தலைவர் அக்பர் சதார் ஆகியோரும் அடங்குவர்.


























அதற்குள் அவர் பரலோகம் போய் விடுவார்!
ஒரு வேளை இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டுக்கு முன்னேற தலையில துண்ட போட்டுக்கிட்டுப் போய்விடுவார் என ஏற்பாட்டாளர்கள் நினைக்கிறார்களோ!
do as i tell u to do dont do as i do – இதுதானே இத்தனை ஆண்டு காலம் நடக்கும் நடைமுறை.
அதுவரைக்கும் மகாதிர் கொடுக்கும் தாக்குதல் இவரால் சமாளிக்க முடியும்மா ?
ஊழல் நாயகன் இலஞ்ச ஊழலுக்கு எதிர்ப்பாக உரை நிகழ்த்தப் போவது பசுத்தோல் போத்திய புலி செய்யும் வேலை.யாராவது இலஞ்சம் வாங்காத அமைச்சர் இருந்தால் அவர் உரை நிகழ்த்துவது நல்லது.மேலே உள்ள படத்தில் நசிப் கை காட்டிக் கொண்டிருப்பது கையூட்டு கேட்பதைப் போல் உள்ளது.ஒற்றை மலேசியாவின் உருமாற்று நாயகன் நசிப்பின் ஆட்சியில் நாடு உருமாற்றம் காணவில்லை உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது.
எவன் எதைப் பேசுவது , செய்வது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது ! ( அரோஹரா மலேசியா )
முதலைக்குதான் இன்னொரு முதலையை பற்றியும்.. அதன் நெளிவு சுளிவுகளையும் தெரியும்… ஆனால் உண்மை தெரியாமல் நாம் ஒரு அப்பாவி மீது பழி போடக்கூடாது…. பிரதமர் அவர்களே நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா.. ஒண்ணுமே புரியவில்லையே…
ஊழல் பெருச்சாளிகள் மாநாடு கூட்டி ஊழல் ஒழிப்பு பற்றி விவாதம் செய்வது ,,,,,, ஊழலை ஒழிக்கவா ???? பெருக்கவா ???
என்ன கொடுமை சார்….