விசாரணை பாரபட்சமின்றி நடக்க வேண்டும். அதற்கு 1எம்டிபி ஊழலைப் புலனாய்வு செய்யும் சிறப்புப் பணிக்குழுவிலிருந்து தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அனுமதியில்லாமல் தகவலைப் பெற்றதற்காக வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு (WSJ) எதிராக விசாரணை நடத்த வேண்டும் என ஐஜிபி கோரிக்கை விடுத்திருப்பதால் அவர் அக்குழுவில் இருப்பது சரியல்ல என்று பாஸ் பொக்கோட் சேனா எம்பி மாபுஸ் ஒமார் கூறினார்.
“தகவலை வெளியிட்டவர் யார் என்பதையும் WSJ-க்குத் தகவல் எப்படிக் கிடைத்தது என்பதையும் போலீஸ் விசாரிக்கும் என்ற ஐஜிபி-இன் அறிக்கை, நாட்டின் நற்பெயரை மீட்டெடுக்க உதவப் போவதில்லை”, என பாஸின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் மாபுஸ் குறிப்பிட்டிருந்தார்.
“நாட்டினதும் மக்களினதும் நலனைக் காக்க வேண்டிய போலீஸ், தலைவர்கள் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்செயல்களைப் பாதுகாக்க முற்படுவதுபோல் காணப்படுவதால், ஐஜிபி-இன் செயல் நாட்டின் பெயரை மேலும் மோசமாக்கி மலேசியாவின்மீது உலக நாடுகள் கொண்டுள்ள அவநம்பிக்கை மேலோங்க வகை செய்திடும்”, என்றவர் சொன்னார்.
திருடன் திருடனை விசாரிப்பது இந்த நக்கி மலேசியாவில் மட்டும்தான் நடக்கும்
அட நீங்க வேறே. ஜெட்டியை தவிர மத்தவனுங்க எல்லாம் மொள்ள மாறியும் முடிச்சவிக்கியும்.
ஒரு குட்டையில் ஊறிய மட்டைகை எப்படி நாயம் கிடைக்கும் .
நியாயத்திற்கும் நீதிக்கும் இங்கு வேலை கிடையாது. பொய்க்கும் பித்தலாட்டத்திர்க்கும் ஜால்ராக்களுக்கும் தான் இந் நாட்டில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
இறந்து போன லீ குவான் இயுவ் ஒருவேளை இந் நாட்டில் பிறப்பாரோ என்னவோ- எல்லாத்திற்கும் முடிவுகட்ட.
அரசியல் திரூடன்