முறைகேடு பிடிக்காமல் 1எம்டிபி அதிகாரிகள் இருவர் பதவி விலகினார்களாம்

quit1எம்டிபி  இயக்குனர்கள்  இருவர்,  2009-இல் பெட்ரோசவூதியுடன்   கூட்டாக  அமைக்கப்பட்ட (ஜேவி)  நிறுவனத்துக்குச்  செல்ல  வேண்டிய யுஎஸ்$700 மில்லியன் வேறொரு  நிறுவனத்துக்கு  மாற்றிவிடப்பட்டடது  பிடிக்காமல்  பதவி  விலகினர்.

1எம்டிபி  பணக் கையாடல்மீதான  விசாரணையில்  இது  தெரிய  வந்திருப்பதாக த  ஸ்டார்  அறிவித்துள்ளது.

1எம்டிபி வாரியத்  தலைவர்  முகம்மட்  பக்கே  சாலே,  அஸ்லான்  முகம்மட்  சைனோல்  ஆகியோரே  அவ்விருவருமாவர்.  மாற்றிவிடப்பட்ட  பணம்  திருப்பிக்  கொடுக்கப்பட  வேண்டும்  என்ற  அவர்களின்  கோரிக்கை  புறக்கணித்தப்பட்டதால்  அவ்விருவரும்  ஆத்திரப்பட்டனர்.

“ஜேவி நிறுவனத்துக்குச்  செல்ல  வேண்டிய  பணம்  தங்கள்  ஒப்புதலின்றி  இன்னொரு  நிறுவனத்துக்கு  மாற்றிவிடப்பட்டதை  அறிந்து  வாரிய  உறுப்பினர்கள்  அதிருப்தி  அடைந்தனர்.

“யுஎஸ்700 மில்லியனும்  ஜேவி நிறுவனத்துக்குத்  திரும்ப  வேண்டும்  என்றவர்கள்  பணித்தார்கள். ஆனால், அதைத்  திரும்பப்  பெற  எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை”, என  விசாரணையாளர்  ஒருவர்  தெரிவித்ததாக  த  ஸ்டார்  கூறியது.