லவ் யாட் பிளாசா வழக்க நிலைக்குத் திரும்பியது

normalவார  இறுதி  சச்சரவுகளால்  நேற்று  வெரிச்சோடிக்  கிடந்த  மின்னியல்  பொருள்  விற்பனைக்குப்  பேர்போன  லவ் யாட்  பிளாசா  இன்று  வழக்க  நிலைக்குத்  திரும்பிக்  கொண்டிருக்கிறது.

கடைக்காரர்கள்  விற்பனைக்காக  அவர்களின்  பொருள்களை  அழகாக  அடுக்கி  வைப்பதையும்  வாடிக்கையாளர்கள்  பொருள்களை  வாங்குமுன்னர்  பேரம்  பேசுவதையும் மலேசியாகினி  கவனித்தது.

ஆனால், சச்சரவுக்கு  மையமாக  அமைந்திருந்த  ஒப்போ  ஸ்மார்ட்போன்  கடையின்  கதவுகள்  மட்டும்  திறக்கப்படாமல் மூடிக்  கிடந்தன.

கைபேசி  விற்பனை  செய்யும்  கடை  ஒன்றின் ஊழியரான  ஒருவர்- குமார்  என்று  மட்டும் தம்மை  அறிமுகப்படுத்திக்  கொண்டார்-  இன்று காலை  பல  கடைகள்  வியாபாரத்துக்குத்  திறக்கப்பட்டதைக்  கண்டதும்தான்   பாதுகாப்பு  உணர்வு  வருகிறது  என்றார்.

“இப்போது  கூடுதல் பாதுகாப்புடன்  இருப்பதாக  உணர்கிறேன். வார  இறுதி  சச்சரவுகள்  பயமூட்டின. ஞாயிற்றுக்கிழமைதான்  மிகவும்  மோசம். என் ‘போஸ்’ பொருள் இருப்பைக்  கணக்கெடுக்க  பின்னிரவு  இரண்டு  மணிக்கு  அழைத்தார்”, எனப் பகுதிநேர  ஊழியரான  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.