அன்வாருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பெருநாள் கொண்டாட்டம் இல்லை

wan azizaபிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில், ஹரி  ராயாவின்  முதல்  நாளில் அவரும்  அவரின்  குடும்பத்தாரும்  அவரின்  கணவர்  அன்வார்  இப்ராகிமைச்  சந்திக்க  அனுமதிக்கப்படாததை  எண்ணி  வருத்தமடைந்துள்ளார்.

முன்பு  அன்வார்  சிறையில்  இருந்தபோது  ஹரி  ராயா முதல்  நாளில்  அல்லது  இரண்டாவது  நாளில்  அவரைச்  சந்திக்க  முடிந்தது. ஆனால்,  இப்போது  சிறை  விதிமுறைகளில் “நிறைய  மாற்றங்கள்  ஏற்பட்டிருப்பதாக  அவரிடம்  தெரிவிக்கப்பட்டது.

“ஹரி  ராயாவின்  இரண்டாவது  நாளான  நாளை  அவரைச்  சந்திப்பதற்கு  அனுமதி  கேட்டோம். கிடைக்கவில்லை. ‘ஹரி  ராயாவின் முதல்  நாளிலும்  இரண்டாவது  நாளிலும்  நாங்கள்(சிறை  அதிகாரிகள்) விடுமுறையில்  இருப்போம்’  என்று  என்னிடம்  தெரிவித்தார்கள்”, என  வான்  அசிசா  நேற்றிரவு  கூறினார்.

“(அதிகாரிகள்)  ‘மூன்றாம், நான்காம்  நாள்களில்  நிறைய  வருகையாளர்கள்  இருபார்கள்  5,000  கைதிகள்  இருப்பதால்  அவர்களைப்  பார்க்க அவர்களின்  குடும்பத்தார்  வருவார்கள்’அதனால் ஐந்தாவது அல்லது  ஆறாவது  நாளில்  எங்களை  வரச்  சொன்னார்கள்”, என்றாரவர்.

நேற்றிரவு  சுங்கை  பூலோ  சிறைச்சாலைக்கு  வெளியில்  அன்வாருக்கு  ஆதரவு  தெரிவிக்கத்  திரண்டிருந்த  சுமார்  150 ஆதரவாளர்களிடம்  வான்  அசிசா  பேசினார்.