1எம்டிபி புலனாய்வு: மேலும் ஒரு நிறுவன இயக்குனர் கைது

1mdb1எம்டிபிமீதான  விசாரணைக்கு  உதவியாக  நிர்வாக  இயக்குனர்  ஒருவர்  ஐந்து  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளார்.

அவர்  ஒரு ‘டத்தோ’என்று  கூறப்படுகிறது.

அவர்,  1எம்டிபி பணக்கையாடலை விசாரணை  செய்துவரும்  சிறப்புப்  பணிக்குழு  கைது  செய்துள்ள இரண்டாவது  நபராவார்.

1எம்டிபி  விவகாரம்  தொடர்பில்  நேற்று  ஒருவர்  கைது  செய்யப்பட்டார்.  ஒரு  நிறுவனத்தின்  இயக்குனரான  அவர்  கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  கைது  செய்யப்பட்டு  நான்கு  நாள்களுக்குக்  காவலில்  வைக்கப்பட்டுள்ளார்.