1எம்டிபி தொடர்பில் சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்பதற்கு இதுவரை ஆதாரம் எதுவும் இல்லை என மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கூறியது.
இன்று புத்ரா ஜெயாவில், மலேசியாகினி உள்பட, இணைய செய்தித்தளங்களின் தலைமை செய்தியாசிரியர்களைச் சந்தித்த எம்சிஎம்சி கண்காணிப்பு மற்றும் அமலாக்கத் தலைவர் சுல்கர்னைன் முகம்மட் யாசின் இதைத் தெரிவித்தார்.
சரவாக் ரிப்போர்ட் முடக்கப்பட்டிருப்பது ஓரு தடுப்பு நடவடிக்கைதான் என்றாரவர்.
அந்த இணையத்தளத்தின்மீது போலீஸ் விசாரணை நடைபெறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
போலீஸ் விசாரணை முடிந்ததும் அந்த இணையத்தளத்துக்கான தடையை நீக்குவது பற்றி எம்சிஎம்சி பரிசீலிக்கும்.
ஜார்ஜ் புஷ் சொன்னது போல உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காக ‘pre-emptive strike’ செய்யிறிங்க!. அப்படின்னா இனி எந்த இனைய தளம் மீதும் போலிஸ் விசாரணை நடத்துகின்றனர் என்று ஒரு தகவல் வந்தால் போதும். அதை வைத்து அந்த இணைய தளத்தை தற்காலிக தடை செய்கின்றோம் என்று சொல்வதற்கு முன் உதாரணத்தைக் காண்பித்து விட்டீர்கள். புது வகை மின்னியல் ஊடக அடக்கு முறையோ இது?. குற்றம் சாட்டப் படாமலே தண்டனை வழங்கும் முறைதான் ‘pre-emptive strike’ என்று ஜார்ஜ் புஷ்ஷிடம் இருந்து கற்றுக் கொண்டோம். அதனை இப்பொழுது இந்நாட்டில் பயன்பாட்டில் பார்க்கின்றோம். உண்மையை நேர்வழியில் எதிர் கொள்ளாத திருடர்களுக்குப் பல குறுக்கு வழிகள் உதவி செய்கின்றன. நாம் ஏழைகள். சட்டம் நம்மை தலை கீழாக தொங்கப் போட்டு அடிக்கும். பணக்காரர்களுக்கு பரிவட்டம் கட்டம் கட்டி வெண் சாமரம் வீசும். இந்த நாட்டுப் நடப்பைப் பார்க்கும் பொழுது நெஞ்சு வழிதான் வருது.
ஆட்சி நிலைக்க, எல்லா அடக்கு, முடக்கு ஒடுக்கு நடவடிக்கையை கையாள்வதில் அம்னோவுக்கு ஈடு அம்னோவே!!!! தூங்கிய மக்களும் விழிப்பு கொண்டு வருகின்றனர்!! தப்பான தகவலை வெளியிட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறப்பு. சட்ட நடவடிக்கையில் எது உண்மை எது பொய் என்று மக்கள் யூகிக்க / அறிய வாய்ப்புண்டு!!! அடக்கு, முடக்கு ஒடுக்கு நடவடிக்கைகள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது!!!