நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்பவர்களில் எஸ்ஆர்சி நிர்வாக இயக்குனர் நிக் பைசல் அரிப் நிக் ஒஸ்மான் கமிலும் ஒருவராவார்.
.பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த கணக்குக்கு ரிம2.6 பில்லியன் மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நிக் பைசலுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
1எம்டிபிமீது விசாரணை நடத்திவரும் சிறப்புப் பணிக்குழு அவரையும் விசாரிக்க விரும்புகிறது. நிக் பைசலும் எஸ்ஆர்சி இயக்குனர் சுபோ முகம்மட் யாசினும் நஜிப்பின் வங்கிக் கணக்கு தொடர்பாக பணிக்குழுவிடம் வாக்குமூலம் அளிக்க வந்திருக்க வேண்டும்.
ஆனால், நிக் பைசல், சுபோ இருவருமே காணாமல் போய்விட்டதாக த சன் அறிவித்துள்ளது. ஆனால், விசாரணைக் குழுவுக்கு அணுக்கமான வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி அவர்களில் ஒருவர் இந்தோனேசியாவில் இருப்பதாக த சன் கூறிற்று. மற்றொருவர் பற்றித் தகவல் இல்லை.
விசாரணைக் குழு தொழில் அதிபர் ஜோ லவ்-வையும் தேடி வருவதாக தெரிகிறது.
நேற்று, எஸ்ஆர்சி இண்டர்நேசனல்- உடன் தொடர்புள்ள நிர்வாக இயக்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டு 1எம்டிபி விசாரணைக்கு உதவியாக ஐந்து நாள் காவலில் வைக்கப்பட்டார்.

























அழியணும் நஜிஸ் அழியணும்
அன்ம்பு பிரதமருக்கு பயணத் தடை விதிதாகிவிட்டதா?