பணிக்குழு நஜிப்பிடம் விசாரணை நடத்தியதா?

taskforce1எம்டிபி  பற்றிக்  கூறப்படும் குற்றம்குறைகளை  விசாரித்து  வரும்  சிறப்புப்  பணிக்குழு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்துள்ளதா  என்று பிகேஆர்  எம்பி  ரபிஸி  ரம்லி  வினவினார்.

இந்த  விசாரணையில்  முக்கியமான  ஆள்  நஜிப்தான்  என்றாரவர்.

“நஜிப்பை  விசாரிக்கவில்லை  என்றால்  அது  பணிக்குழு  சுதந்திரமாகத்தான்  இயங்குகிறதா  என்ற  சந்தேகத்துக்கு  இடமளிக்கும்”, என்று  ரபிஸி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

நஜிப், 1எம்டிபி ஆலோசனை  வாரியத்தின்  தலைவராவார்.

பிரதமரின்  சொந்த  கணக்குக்கு  ரிம2.6 பில்லியன்  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  விவகாரத்தையும் பணிக்குழு   ஆய்வு  செய்து  வருகிறது.