கொலைகாரர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோட முடிகிறதுபோது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்குப் பயணம் செய்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுவது ஏன் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே கேள்வி எழுப்பியுள்ளது.
கூட்டரசு அரசியலமைப்பு பயணம் செய்வதற்கு உரிமை வழங்கும்போது, ‘மேலிட உத்தரவு’ எனக் கூறி அதைத் தடுத்து நிறுத்துவது எப்படி சட்டப்படி நியாயமாகும் என அது வினவியது.
“சமூக ஆர்வலர்களும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் குடிநுழைவுத் துறையைக் கேட்டுவிட்டுத்தான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதற்குக் காரணம் என்ன?
“வேடிக்கை என்னவென்றால், அல்டான்துன்யா ஷரீபுவின் கொலைகாரனான சிருல் அஸ்கார் உமர் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோட முடிகிறது”, என பெர்சே ஓர் அறிக்கையில் கூறியது.
1எம்டிபி விவகாரத்தை விமர்சித்த டோனி புவா, தி எட்ஜ் ஊடகக் குழுமத் தலைவர் தோங் கூய் ஒங் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடு பற்றிக் கருத்துரைத்தபோது அது இவ்வாறு கூறியது.


























ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் குற்றவாளி என்று தண்டனை விதிக்கப் பட்ட கொலைகாரனை விட பயங்கரவாதிகள் என்று இந்த அரசாங்கமே செய்கையால் சொல்லும்போது, ஜனநாயகத்தையே கொலை செய்த மாதிரி இருக்கு.
சிரிப்பு தான் வருகிறது இதை படித்தவுடன்.
இதிலிருந்து தெரிய வேண்டும் மக்கள் ஆட்சி எவ்வளவு தெளிவாக இங்கு செயல் படுகின்றது என்று. வேண்டியவள் உடைத்தால் மண் சட்டி வேண்டாதவள் உடைத்தால் பொன் சட்டி– அதிலும் நீதி நேர்மை உள்ள அதிகாரிகள் இருந்தால் இவ்வளவு ஆட மாட்டார்கள்- எல்லாம் தரம் தகுதி இல்லா அரைவேக்காடுகளை அதிகாரிகள் ஆக்கினால் இந்த கூறு கெட்ட அரசியல் வாதிகளுக்கு ஆட்டம் போடுகின்றனர் இந்தியாவைப்போல்.
சட்டம் ஒரு இருட்டறை அங்கே எதுவும் நடக்கலாம் என்பது அறிஞர்களின் கூற்று….!
ஒண்ணுமே புரியலே இந்த நாட்டிலே.என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
பாரிசான் கூட்டணி கட்சிகளுக்கு வெட்கமே இல்லையா ? தலைமை கட்சி இவ்வளவு கேவலமாக நடந்தாலும் இந்த மானமற்ற கட்சிகள் அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட வில்லையே ! இனி இவர்கள் எல்லாம் ஒட்டு கேட்டு வந்தால் செருப்பு மாலை போடுவதில் தவறு ஏதும் இருக்காது என்று நம்புவோமாக . முக்கியமாக பரிசான் இந்திய கட்சிகளுக்கு .
மாமியார் உடைத்தால் மண்சட்டி, ஆனால் அதையே மருமகள் உடைத்தால் அது பொன்சட்டி.