தி எட்ஜ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1எம்டிபி தொடர்பான செய்திகள் தொடர்பில் அதன் வெளியீட்டாளர் ஹோ காய் டேட்டை போலீசார் விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டனுப்பினர்.
‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குக் கெடுதல் செய்யக்கூடிய செயல்களில் ஈடுபட்டதற்காக’ குற்றவியல் சட்டம் பிரிவு 124-இன்கீழ் அவர்மீது விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது.
நேற்று சில போலீஸ் வட்டாரங்கள் தி எட்ஜ் ஊடகக் குழுமத்தின் உரிமையாளர் தோங் கூய் ஒங்-கும் இரண்டு எதிரணி எம்பிகளும் குற்றவியல் சட்டம் பிரிவு 124-இன்கீழ் விசாரிக்கப்படுவதாக மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தனர்.
பாண்டான் எம்பி ரபிஸி ரம்பிலியும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா ஆகியோரே அவ்விரண்டு எம்பிகளும் ஆவர்.
முன்னாள் செய்தியாளர் லெஸ்டர் மெலான்யி, 1எம்டிபி-க்கு எதிரான ஆதாரங்கள் எல்லாம் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறியதை அடுத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதித்யா சேனலை விட இது இன்னும் ரொம்ப கமெடி.
பண்டிக்காரன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கெடுத்து சீரழித்து வருகையில் ,,, இவர்கள் கெடுதல் செய்ய இயலுமா ?????
போலீசாரால் தேசிய மொழியில் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் “கேள்வி புரியவில்லை அல்லது விளங்கவில்லை” என கூறி கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்க சொல்லுங்கள்.
ஏனென்றால், அன்று “MH 370” பத்திரிக்கையாளர் சந்திப்பில் நமது “DCA”-வின் ஆங்கில திறமையை பார்த்து உலகமே வாயால் கேலியாக சிரித்தது என்றால் இன்று நஜிப்பின் வழக்குரைஞர்களின் ஆங்கில திறமையை பார்த்து உலகமே சூத்தால் சிரிக்கின்றனர்.