தி எட்ஜ்: ஆவணங்களுக்குப் பணம் தருவதாக ஜஸ்டோவை நம்ப வைத்தோம்

boss1எம்டிபி  தொடர்பான  ஆவணங்களைக்  கொடுத்தால் பணம்  தருவதாக பெட்ரோசவூதி  தலைவர்  சேவியர்  எண்ட்ரி  ஜஸ்டோவிடம்  சொன்னது  உண்மைதான்  என்பதை  தி  எட்ஜ்  ஊடகக்  குழுமத்  தலைவர்  தோங்  கூட்  ஒங்  ஒப்புக்கொண்டார்.

அந்த  ஆவணங்களைப்  பெறுவதற்காகத்தான்  அப்படிச்  சொன்னதாக  அவர்  கூறினார்.

“ஆம், அவரிடம்  பொய்யுரைத்தோம். மலேசியர்களும்  வெளிநாட்டவரும்  அடங்கிய  சிறு  கும்பல் மலேசிய  மக்களிடம்  யுஎஸ்1.83 பில்லியனை ஏமாற்றியதற்கான  ஆதாரங்களைப்  பெற  அதைத்  தவிர  வேறு  வழி  தெரியவில்லை.

“அவருடைய கூற்று  நாங்கள்  முன்பு சொன்னதை  உறுதிப்படுத்துகிறது  அதாவது  நாங்கள்  யாருக்கும்  பணம்  கொடுக்கவில்லை”, என்றவர் ஊடக  அறிக்கை ஒன்றில்  கூறினார்.

நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குக்  கெடுதல்  செய்யக்கூடிய  செயல்களில்  ஈடுபட்டதற்காக  குற்றவியல்  சட்டம்  பிரிவு   124-இன்கீழ்  விசாரிக்கப்பட்டுவரும்  தோங்  சிங்கப்பூர்  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸில்  வெளியான  ஜஸ்டோவின்  நேர்காணல்மீது  கருத்துரைத்தபோது  இவ்வாறு  சொன்னார்.

ஆனால், ஆவணங்களில் மாற்றங்கள்  செய்து  அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதற்குத் திட்டம்  போடப்பட்டிருந்ததாக  ஜஸ்டோ  கூறியிருப்பதை  தி  எட்ஜ்  உரிமையாளர்  மறுத்தார்.