நஜிப்பைப் பதவி இறக்கத்தான் எட்ஜ் நாளேட்டுக்குத் தடைவிதிப்பாம்: பாஸ் எம்பியின் புது விளக்கம்

mafuzத  எட்ஜ்  பத்திரிகைகள்  மூன்று-மாதத்துக்கு  இடைநீக்கம்  செய்யப்பட்டதற்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்   காரணம்  என்று  பொதுவாகக்  கருதப்படுகிறது.

ஆனால்  காரணம்  அதுவல்ல  என்கிறார்  பாஸ்  எம்பி  மாபுஸ் ஒமார்.

அது, அம்னோ தலைவர்களின்  “அரசியல்  சதித்திட்டமாம்”.  பிரதமரை  இதற்குமேலும்  தற்காக்கவோ  பாதுகாக்கவோ  இயலாது  என்ற  முடிவுக்கு  வந்துள்ள  அம்னோ   தலைவர்கள்  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஜிட்  ஹமிடி  மூலமாக  அந்நடவடிக்கையை  எடுத்துள்ளனர்  என்ற  ஊகம்  நிலவுவதாக மாபுஸ்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“நாளேடுகளுக்கு  இடைக்கால  தடை  விதிக்கப்பட்டதுகூட  பிரதமர்  பதவியிலிருந்து  விலகுவதற்கு நஜிப்புக்கு  அழுத்தம்  கொடுப்பதற்காகத்தான்”, என்றாரவர்.

“நஜிப்  இந்த  அழுத்தத்துக்குப்  பணிந்து  போவாரா  மாட்டாரா  என்பது  1எம்டிபி  விவகாரத்தைப்  புலனாய்வு  செய்துவரும்  சிறப்புப்  பணிக்குழுவைப்  பொறுத்துள்ளது.

“பணிக்குழுவை நஜிப்பால் ‘வாங்க’  முடிந்தால் மேலும்  சிறிது  காலத்துக்கு  அவரால்  தாக்குப்  பிடிக்க  முடியும். ஆனால், பணிக்குழு  கடுமையான  கண்டனத்துக்கு  இலக்காகும். அதில்  சம்பந்தப்பட்டுள்ள  அமைப்புகளின்மீது   நம்பிக்கை  குறைந்துபோகும்.

“அடுத்த  அத்தியாயத்துக்காகக்  காத்திருப்போம்”, என்று  மாபுஸ்  கூறினார்.