தி எட்ஜின் இடைநீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

protestசெய்தியாளர்கள், சமூக  ஆர்வலர்கள்,  பொதுமக்கள்  எனச்  சுமார்  70 பேர்  கோலாலும்பூரில்  தி  எட்ஜ்  ஊடகக்  குழுமத்தின்  தலைமையகத்துக்கு  வெளியில்  ஒன்றுதிரண்டு  அதற்குத்  தங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொண்டனர்.

1எம்டிபி-யைக்  குறைகூறும்  செய்திகளை  வெளியிட்டதற்காக  தி  எட்ஜ்  நாளேடும் தி  எட்ஜ்  வார இதழும்  உள்துறை அமைச்சால் தற்காலிகமாக  இரத்துச்  செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்தினர் “பத்திரிகையைக் கட்டுப்படுத்தாதே”, “ஊடகம்  வாழ்க”  என  முழக்கமிட்டனர். இந்தக்  கூட்டமும்  ஆர்ப்பாட்டமும் ஆகஸ்ட்  8இல்  நடைபெறவுள்ள  மிகப்  பெரிய  பேரணிக்கு  முன்னோட்டம்போல்  அமைந்திருந்தது.