எம்ஏசிசி முன்னாள் ஆலோசகரும் ஏஜி அலுவலக அதிகாரியும் கைது

sprmமலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் ஆலோசகரான  ஒரு ‘டான்ஸ்ரீ’-யையும் சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி)  அலுவலகத்தின் அதிகாரி  ஒருவரையும் போலீஸ்  கைது செய்துள்ளது.

1எம்டிபி விவகாரம்மீதான சிறப்புப்  பணிக்குழுவின்  விசாரணை  தொடர்பில்  அவ்விருவரும்  கைது  செய்யப்பட்டதாக  த  ஸ்டார்  தெரிவித்தது.

போலீஸ், எம்ஏசிசி, பேங்க்  நெகாரா, ஏஜி  அலுவலகம்  ஆகியவற்றைக்  கொண்ட  சிறப்புப்  பணிக்குழு  மற்றவற்றோடு பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  மாற்றிவிடப்பட்ட  விவகாரத்தையும்  விசாரித்து  வருகிறது.