பிஎசி உறுப்பினர்களின் நியமனத்திற்காக நாடாளுமன்ற அவசரக் கூட்டம் வேண்டும், கிட் சியாங்

 

Parliamentshouldmeetநாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவிற்கு (பிஎசி) புது உறுப்பினர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அவரசக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஎபியின் மூத்த தலைவருமான லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டம் மெர்தேக்கா தினமான ஆகஸ்ட் 31 க்குள் நடத்தப்பட வேண்டும் என்றாரவர்.

பிஎசியின் நான்கு உறுப்பினர்களை, அதன் தலைவர் உட்பட, அரசாங்கப் பதவிகளுக்கு நஜிப் நியமித்ததைத் தொடர்ந்து அக்குழு மேற்கொண்டிருந்த 1எம்டிபி மீதான விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. அக்குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் அது விசாரணையைத் தொடர முடியாது என்று மக்களவைத் தலைவர் அறிவித்துள்ளார்.Lim Kit Siang1

பிரதமர் நஜிப் அவர் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

அடிமட்டத்திலிருந்து எழும்பும் உண்மையான குரல்களுக்கு செவி சாயுங்கள் என்று தாம் பிரதமருக்கு ஆலோசனை கூறுவதாக லிம் தெரிவித்தார்.