நஜிப் ‘பயந்துபோய்’ அம்னோ கூட்டத்தைத் தள்ளிப்போடவில்லை

nazஅம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்கான  நாள்  இன்னும்  முடிவு  செய்யப்படவில்லை. இதன்  தொடர்பில்  பல்வேறு  ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டாலும்  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கு உச்சமன்றத்தைச்  சந்திப்பதற்குத்  தயக்கம்  ஏதுமில்லை  என்றே  கட்சித்  தலைவர்கள்  கூறுகின்றனர்.

கட்சித்  தலைவர்கள்  1எம்டிபி  பற்றியும்  அமைச்சரவை  மாற்றம்  பற்றியும்  துருவித்  துருவி  விசாரிப்பார்கள்  என்று  நஜிப்  அஞ்சுவதாகக்  கூறப்படுவதை  உச்சமன்ற  உறுப்பினர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  மறுத்தார்.

அந்தப்  பேச்சுக்கே இடமில்லை  என்ற  நஸ்ரி,  நஜிப்  குற்றமற்றவர்  என்பதை  மலேசிய ஊழல்தடுப்பு  ஆணையமே  அறிவித்திருக்கிறது  என்றார்.

“அவர் பயப்படுவதற்குக்  காரணமே  இல்லை. அது (1எம்டிபி) பற்றி  அனைவரும்  அறிவர்”, என  நஸ்ரி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.