இணையத்தில் ‘பொய்யான செய்தி’கள் தடுக்கப்படும்

mediaஇணையத்தில் “பொய்யான  தகவல்களும்  வதந்திகளும்” இடம்பெறுவதாகக்  கூறிய  தகவல், பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக், சமூக  வலைத்தள  நடத்துனர்களின்  உதவியுடன்   அவற்றுக்கு  முடிவுகட்டப்படும்  என்றார்.

“ஊடகங்களில்,  குறிப்பாக  இணையச்  செய்தித்  தளங்களில் பொய்யான  தகவல்கள்  முக்கிய இடம்பெற்று  வருகின்றன.

“இதன்  தொடர்பில்,  முகநூல்,  கூகுல்,  டிவிட்டர்  ஆகியவற்றைச்  சந்தித்து  சமூக  வலைத்தளங்களில்  பொய்யான தகவல்கள்  மற்றும்   வதந்திகளின்  பரவல்  பெருகிவருவதைத்  தடுக்க  அவற்றின்  ஒத்துழைப்பைப்  பெறுமாறு  மலேசிய  பல்லூடக  ஆணையத்துக்கு  உத்தரவிட்டிருக்கிறேன்”, என்றாரவர்.

மூன்று  வலைத்தள  நடத்துனர்களுமே  அதிகாரிகளுடன்  ஒத்துழைத்தே  வருகிறார்கள். ஆனாலும்,  ஒத்துழைப்பை  மேலும்  அதிகரிக்க  வேண்டிய  அவசியம்  ஏற்பட்டிருப்பதாக  அமைச்சர்  சொன்னார்.