அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளை போலீஸ் ஆராயும்

copஅரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  இயக்கமொன்று   மேற்கொள்ளப்பட்டிருப்பதாக்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட் ஹமிடி  கூறியிருப்பதன்  தொடர்பில்  போலீசார்  மூன்று  புகார்களைப்  பெற்றுள்ளனர்.

அப்புகார்கள்மீது,   நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குக்  கேடு  செய்யும்  நடவடிக்கைகள்  தொடர்பான  குற்றவியல்  சட்டம்  பகுதி  124பி-இன்கீழ்  விசாரணை நடத்தப்படும்  எனப்  போலீஸ் படைத்தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“அரசமைப்புக்கு  விரோதமான  வழிகளில்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  முயற்சிகள்  நடப்பது  தெரிய  வந்தால்  நாங்கள்  கண்டிப்பாக  நடவடிக்கை  எடுப்போம்”, என்றாரவர்.

அம்னோ  தலைவர்  ஒருவர்  அரசாங்கத்தைக்  கவிழ்க்கத்  திட்டமிடுவதாக  ஜாஹிட்  கூறியிருப்பதில்  உண்மை  உண்டா  என்று  வினவியதற்கு  போலீஸ்  தலைவர்  விடையளிக்க  மறுத்தார்.

“அதை  அம்னோ  தலைமையிடம்தான்  கேட்க  வேண்டும்.  கட்சி  விவகாரங்களில்  போலீஸ்  தலையிடுவதில்லை. அதனால்  கட்சி  விவகாரங்கள்  பற்றி  என்னிடம் கேட்காதீர்கள்”,  என்றார்.