அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி என்பதை ரபிடா நம்பவில்லை

rafidahஅரசாங்கத்தையும்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கையும்  கவிழ்க்க  அம்னோ  தலைவர்  ஒருவர்  சதி  செய்கிறார்  என்று  கூறப்படுவதை  முன்னாள்  அமைச்சர்  ரபிடா  அசீஸ்  நம்பவில்லை.

துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அவ்வாறு  கூறுவதைக்  கேட்டு  அதிர்ச்சி  அடைவதாக  அவர்  குறிப்பிட்டார்.

“சதித்  திட்டங்கள்  (தலைமையை) முடிவு  செய்வதில்லை. வாக்காளர்களாகிய  மக்கள்தாம்  வரும்  பொதுத்  தேர்தலில்  அதை  முடிவு  செய்வார்கள்.

“அதனால்  மக்களை  முன்னிலைப்படுத்தி,  சிறந்த  முறையில்  நாட்டை  ஆட்சி  செய்யுங்கள்”, என ரபிடா  முகநூலில் கூறியிருந்தார்.