பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்: ஜோகூர் சுல்தான் கோரிக்கை

sulநாட்டின்  நிலைத்தன்மை  சீர்குலைந்து  வருவதையும்   ரிங்கிட்டின் மதிப்பு  சரிவடைந்துவருவதையும் தடுத்து  நிறுத்த வேண்டும்  என ஜோகூர்  சுல்தான்  சுல்தான்  இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். ஆட்சியாளர்கள்  அரசாங்கத்திடம்  இப்படிக்  கோரிக்கை  வைப்பது  வழக்கத்தில்  இல்லாத  ஒன்று.

ஆட்சியாளரான  தாம்  அரசியலில்  தலையிடக்  கூடாத  என்பதை  சுல்தான்  ஒப்புக்கொண்டார்.  ஆனாலும்  மக்களின்  கவலையை  எடுத்துரைப்பது  தமது  கடமை  என்று  கருதுவதாக  அவர் சொன்னார்.

“ஆட்சியாளர்  என்ற  முறையில் நான்  அரசியலில்  சம்பந்தப்படக்கூடாது.  ஆனாலும், அரசன்  என்ற  முறையில்  என்  மாநில  மக்கள் நல்ல,  முற்போக்கான, வளப்பமான  சூழலில்  வாழ்வதை உறுதிப்படுத்துவது  என்  கடமையாகும்.

“எனவே, அரசாங்கம், ரிங்கிட்டின்  வீழ்ச்சி  உள்பட,  நாம்  எதிர்நோக்கும்  பிரச்னைகளுக்கு  உடனடி  தீர்வு  காண  வேண்டும்  என  வலியுறுத்துகிறேன்”. சுல்தான்  இப்ராகிம்,  Johor Southern Tigers  முகநூல்  பக்கத்தில்  பதிவேற்றம்  செய்யப்பட்டிருந்த  உரை ஒன்றில்  இவ்வாறு  குறிப்பிட்டிருந்தார்.