நஜிப்பின் ரிம2.6 பில்லியன் பற்றி விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரக் கூட்டம் கூட்டுகிறது

barவழக்குரைஞர்  மன்றம்,  விசாரணைகளில்   நிகழ்ந்துள்ள குறுக்கீடுகள்  பற்றி  விவாதிப்பதற்காக அவசரக்  கூட்டமொன்றை  நடத்த  முடிவு  செய்துள்ளது. அதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்தக்  கணக்கில்  போடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியன்  பற்றியும்  விவாதிக்கப்படும்.

கடந்த  வெள்ளிக்கிழமை  நடந்த  ஒரு  சிறப்புக்  கூட்டத்தில்  அவசரக்  கூட்டம்(இஜிஎம்)  நடத்துவது  பற்றி  முடிவு  செய்யப்பட்டது.

வழக்குரைஞர்களுக்கு  அனுப்பிய  சுற்றறிக்கையில்  இஜிஎம்  செப்டம்பர்  12-இல் நடக்கும்  என  வழக்குரைஞர்  மன்றம்  கூறியது. இடமும்  கூட்ட  நிகழ்ச்சி  நிரலும்  பின்னர்  ஒரு  நாளில்  அறிவிக்கப்படும்.

“இஜிஎம், எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  சென். பெர்ஹாட்டிலிருந்து  பணம்  மாற்றி  விடப்பட்டது  மற்றும்  பிரதமரின்  சொந்த  வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  மாற்றிவிடப்பட்ட  விவகாரம்  ஆகியவை  மீதான  விசாரணைகளில்  குறுக்கீடுகள்  நிகழ்ந்ததாகக்  கூறப்படுவதை  விவாதிக்கும்….

“அத்துடன்  சட்ட  ஆளுமையை  நிலைநிறுத்தவும்  நீதி பிறழ்ந்து  விடாமல்  தடுக்கவும்  வழக்குரைஞர்  மன்றம்  மேற்கொள்ள  வேண்டிய  நடவடிக்கைகளும்  அதில்  விவாதிக்கப்படும்”, என  அச்சுற்றறிக்கை  தெரிவித்தது.