பெர்சே 4: பிகேஆர் தியன் சுவா, “நஜிப் பதவி துறக்கும் வரையில் நான் போக மாட்டேன்”

 

bersih4-22இரவு மணி 11.30: மஸ்ஜிட் ஜமெக் எல்ஆர்டி நிலையத்திற்கு முன் – பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா, நஜிப் பதவி துறக்கும் வரையில் தாம் டாத்தாரான் மெர்டேக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சூளுரைத்தார்.

“நீங்கள் என்னுடன் இருக்கலாம் அல்லது போகலாம். ஆனால், ரோஸ்மா (நமது கடும் சித்தத்தை) புரிந்து கொள்ளும் வரையில் நான் இங்கேயிருப்பேன்.

“இந்த வாக்குறுதி பிகேஆருக்கோ தியன் சுவாவுக்கோ அல்ல, ஆனால், இது நமது குழந்தைகளுக்கு”, என்றாரவர்.

எனினும், அனைவரும் நள்ளிரவில் கலைந்து செல்ல வேண்டும் என்று பெர்சே பிரைம் பிளேட்போர்ம் வழி செய்தி அனுப்பியுள்ளது.

 

நள்ளிரவு மணி 12.04; பெர்சே 4: பேரணியில் பங்கேற்ற மக்கள் தேசிய கீதம் நெகாராகுவை பாடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.